கும்பகோணம், மே 10-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சட்ட மன்றத் தொகுதி அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பாட் டிற்காக அரசு இ சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
கும்பகோணம் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பள்ளிகளுக்கு தேவையான வருமானச் சான்றி தழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட அரசு சம்பந்தப்பட்ட சான்றிதழ் பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் க.அன்பழகன் அலுவலகத்தின் ஒரு பகுதி யில் இ சேவை மைய திறப்பு விழா கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இ சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்
நிகழ்வில், மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாண சுந்தரம், அரசு தலைமை கோறடா கோவி.செழியன், மாநக ராட்சி துணை மேயர் தமிழழகன், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் குட்டி தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இ சேவையின் முதல் சான்றிதழை மக்களவை உறுப்பி னர் சு.கல்யாணசுந்தரம், தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினார்.