districts

கும்பகோணம் மைதீன் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

கும்பகோணம், மார்ச் 27-  தமிழக அரசு மெல்லும் புகையிலைக்கு தடை விதித்ததை தொடர்ந்து ஆறு மாதமாக கும்பகோணம் மைதீன் புகையிலை தொழிற் சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் 300-க்கும்  மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து  வறுமையில் வாடுகின்றனர். வேலை இழந்து பாதிக்கப்பட்ட தொழிலா ளர்கள் வாழ்வதற்கு நிவாரணம் கோரி கடந்த  3 நாட்களாக தொழிற்சாலையின் முன்பு காத்தி ருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.  இந்நிலையில் சனிக்கிழமை கும்பகோ ணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சி யர் தங்க.பிரபாகரன் தலைமையில் அமைதிப்  பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த் தையில், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சா.ஜீவபாரதி, சிபிஎம் மாநகர செயலாளர் கே.செந்தில்குமார், மைதீன் தொழிலாளர் சங்கபொறுப்பாளர்கள் மற்றும் தொழிற் சங்க பிரதிநிதிகள், அரசு தரப்பில் காவல்துறை அதிகாரி, கிராம நிர்வாக அலுவ லர், வருவாய் ஆய்வாளர், மைதீன் புகை யிலை நிர்வாக மேலாளர் மற்றும் துணை மேலாளர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை முடிவில், மார்ச் 29 (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை மாவட்ட ஆட்சியர் முன்பு தொழிற்சாலை உரிமை யாளர் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள  வேண்டும். அதில் நிவாரணம் சம்பந்தமாகப்  பேசி முடிவு செய்யப்படும் என கும்பகோ ணம் வட்டாட்சியர் தங்க பிரபாகரன் உறுதி யளித்தார். இதனால் தற்காலிகமாக காத்திருப் புப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. செவ்வாயன்று தொழிலாளர்களின் கோரிக் கையை நிறைவேற்றாவிட்டால், புதன்கிழமை  வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போ ராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள் ளது.