கும்பகோணம், ஏப்.26-
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் நிறு வப்பட்டுள்ள அறக்கட்டளை களின் நிதியிலிருந்து 2020-2021- ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவ மாணவி களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா கல்லூரி முதல்வர் நா.தன ராஜன் தலைமையில் நடை பெற்றது.
2020-2021ஆம் ஆண்டுக் கான அறக்கட்டளைகளின் வட்டி நிதியான ரூ.5,50,359, கல்லூரியில் பயிலும் 195 மாணவ மாணவிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் இந்தியப் பண்பாட்டுத்துறை தலை வர் சீ.தங்கராசு வரவேற்புரை நிகழ்த்தினார். அறக்கட் டளை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆங்கிலத்துறைத் தலைவர் சா.சரவணன் இக் கல்லூரியிலுள்ள அறக்கட்ட ளைகளின் வரலாறு பற்றி யும், நிதிகள் எவ்வாறு மாண வர்களுக்கு உதவித்தொகை யாக வழங்கப்படுகின்றன எனக் கூறினார்.
கும்பகோணம் சட்ட மன்ற உறுப்பினர் சாக் கோட்டை க.அன்பழகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 195 மாண வர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் தனது தலைமை யுரையில் “கல்லூரியி லுள்ள 14 அறக்கட்டளைகளி லிருந்து பெறப்படும் நிதியின் வட்டியிலிருந்து இங்கு படிக்கும் மாணவ- மாணவி களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்நிகழ்வு ஒரு விழாவாக கல்லூரியில் நடைபெறுவது இதுவே முதல்முறை என்றார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை அறக்கட்டளை குழு உறுப்பினர்கள் புவியியல் துறைத்தலைவர் கோபு, புள்ளியியல் துறைத்தலை வர் சீ.பொய்யாமொழி, வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் மோகன் ராஜ். தாவரவியல் துறைப் பேராசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவில் பெருமாண்டி ஊராட்சி மன்றத்தலைவர் ஆர்.கே.பாஸ்கர், அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண் டனர். ஆங்கிலத்துறைப் பேராசிரியர் அருள் நாய கம் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.