திருச்சிராப்பள்ளி, ஏப்.5- திருச்சி மாவட்டம் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது. இக்கோவி லில் திருப்பணிகள் முதல் ராஜகோபுரம் புதுப்பித்தல் வரை நடைபெற்றதோடு, 3 புறமும் புதிய கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவு பெற்றன. இதனைத் தொடர்ந்து வியாழனன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலையில் 4 ஆம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பின்னர் வாத்தி யங்கள் முழங்க, புனித நீர் கும்பத்தின் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. வேப்பிலை மாரியம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. திருவிழா விற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, கோவில் செயல் அலுவலர் அன்பழ கன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.