districts

img

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்

நாகர்கோவில், ஏப்.19- 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று குமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தெரிவித்தார். இந்தியா கூட்டணியின் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விஜய் வசந்த் ஏப்ரல் 19 வெள்ளியன்று காலை 7 மணி  அளவில் அகஸ்தீஸ்வரம் அரசு  தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்  நபராக வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த  அவர் கூறுகையில், குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். புதிய இந்தி யாவை உருவாக்க அனைவரும் வாக்களிக்க  வேண்டும். ஒரு ஓட்டு தானே என்று வீட்டில் இருந்து விடக்கூடாது வாக்குச்சாவடிக்கு சென்று உடனடியாக தங்களது வாக்கு களை பதிவு செய்ய வேண்டும். கன்னியா குமரி மாவட்டம் முழுவதும் இந்தியா கூட்ட ணிக்கு பெரும் எழுச்சி உள்ளது. 3 லட்சம் வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெறு வேன். தமிழகம் புதுச்சேரியுடன் 40 தொகுதி களிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்‌‌ என்று தெரிவித்தார்.