தஞ்சாவூர், மே 11 - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இதில், பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மொத்தம் 97 பேர் தேர்வெழுதினர். இதில் 96 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 99 ஆகும். 500-க்கு 493 மதிப்பெண் பெற்று மாணவி நிரஞ்சனா முதலிடமும், 488 மதிப்பெண் பெற்று மாணவன் முகமது இர்பான் இரண்டா மிடமும், 487 மதிப்பெண் பெற்று மாணவி பிரசிதா மூன்றாமிடமும் பிடித்தனர். தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர்கள் சங்க நிறுவனத் தலை வர் ஸ்ரீதர், நிர்வாக இயக் குநர் நாகூர்பிச்சை, குமரப்பா அறக்கட்டளை செயலாளர் நபிஷாபேகம், பொருளாளர் அஸ்வின் கணபதி, அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப.சேகர், நிர்வாக அலுவலர் சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் கமலதாரணி மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வெற்றி பெற்ற மாணவர்களையும், அதற்கு வழிகாட்டிய ஆசிரியர்களையும், பெற்றோர் களையும் வாழ்த்தினர்.