districts

அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க முயற்சிக்கும் ஆசிரியருக்கு பாராட்டு

திருவாரூர், ஏப்.19-  

  திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே  சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவர் சேர்க்கையை அதிகப் படுத்தும் வகையில், பள்ளியில் சேரும் மாண வர்களுக்கு தனது சொந்த செலவில் பரிசு கள், குலுக்கல் முறையில் ஒரு மாணவ னுக்கு ஒரு கிராம் தங்கம் வழங்கப்படும் என  மாணவர்கள் சேர்க்கையில் ஈடுபடும் பள்ளி யின் தலைமை ஆசிரியரின் முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

  குடவாசல் ஒன்றியத்தில் அமைந்துள் ளது சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி. 1939-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இப் பள்ளியில், தற்போது 142 மாணவ, மாணவி கள் பயின்று வருகின்றனர்.  இப்பள்ளி மூலம் வடவேர், பெருமங்க லம், அன்னவாசல், புதுக்குடி உள்ளிட்ட கிராம பகுதி மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

  ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகை யில் சிறப்பு நடவடிக்கைகளை பள்ளி நிர்வா கம் எடுத்து வருகிறது.

  மாணவர் சேர்க்கையை  அதிகரிக்க புதிய முயற்சி

   இந்நிலையில், இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை மேலும் அதிகப்படுத் தும் நோக்கில், பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை சேரும் அனைத்து குழந் தைகளுக்கும் தனது சொந்த செலவில் பரிசுகளை வழங்குவது எனவும், ஜூலை  15 -அன்று காமராசர் பிறந்த நாள் மற்றும்  கல்வி வளர்ச்சி நாளில் குலுக்கல் முறையில் ஒரு மாணவனுக்கு 1 கிராம் தங்க நாண யம் ஊக்கப் பரிசாக வழங்கப்படும் என கூறி  துண்டறிக்கை வீடு வீடாக சென்று வழங்கி வரு கிறார் இப்பள்ளியின் தலைமையாசிரியர் இந்திராணி.

  இதுகுறித்து தலைமையாசிரியர் இந்தி ராணி கூறுகையில், ‘‘எங்கள் பள்ளி மாண வர்களின் தனித்திறன் கண்டறியப்பட்டு, அதற் கான பயிற்சியும், ஊக்கமும் அளிக்கப்படு கிறது. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு  குறித்த விழிப்புணர்வை அளிக்கப்படுகிறது. பெற்றோர் ஆசிரியர் கழக விருது, கர்ம வீரர்  காமராசர் விருது, சிறந்த பள்ளிக்கான விருது  என பல விருதுகளை இப்பள்ளி பெற்று உள்ளது.

   ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், பேரணி, துண்டு பிர சுரங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வரு கிறோம். அந்த வகையில் இந்த ஆண்டு பள்ளி யில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசு வழங்குகிறோம். அத்துடன், சிறப்புப் பரி சாக குலுக்கல் முறையில் ஒரு மாணவருக்கு  ஒரு கிராம் தங்க நாணயம் வழங்க உள்ளோம்.  இந்த திட்டத்தின் மூலம் கண்டிப்பாக மாண வர் சேர்க்கை அதிகரிக்கும்’’ என்றார்.