districts

img

கடல்பசுவை பாதுகாப்பாக கடலுக்குள் விட்ட மீனவருக்கு பாராட்டு

புதுக்கோட்டை, ஆக.12- புதுக்கோட்டை மாவட்டம் மண மேல்குடி அருகே கடலுக்குள் மீன்பிடித்த போது வலையில் சிக்கிய  கடல்பசுவை பாதுகாப்பாக மீண்டும்  கடலுக்குள்ளேயே விட்ட மீனவரை வனத் துறை அலுவலர்கள் பாராட்டினர். மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி பகுதிகளில் மட்டுமே வாழும் அரிய  வகை கடல்வாழ் பாலூட்டி உயிரின மான கடல்பசுக்களைப் பாதுகாப்பதற் காக கடல்பசுப் பாதுகாப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மீனவர்களின்  வலைகளில் சிக்கும் கடல்பசுக்களை பாதுகாப்பாக கடலிலேயே விடும் மீன வர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், வலை சேதமடைந்திருப்பின் அதனை  ஈடு செய்யும் வகையில் ரொக்கப்  பரிசுகளும் வழங்கிப் பாராட்டுத் தெரி விக்கப்படும் என்றும் அரசு சார்பில் அறி விப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மணமேல்குடி வட்டம் தெற்கு புதுத்தெருவைச் சேர்ந்த கருப்பையா என்ற மீனவர்,  திங்கள்கிழமை அதிகாலை தனது நாட்டுப்படகில் கோடியக்கரை அருகே  மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடற்பசு ஒன்று வலையில் சிக்கி யுள்ளது. அவர், அந்தக் கடல்பசுவை வலையிலிருந்து வெளியே எடுத்து கடலுக்குள் மீண்டும் விட்டுள்ளார். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங் களை வனத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து, கடல்பசுக்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வுடன் இச்செ யலைச் செய்த மீனவர் கருப்பை யாவை மாவட்ட வன அலுவலர் சோ. கணேசலிங்கம், அறந்தாங்கி வனச்சரக அலுவலர் மணிவெங்கடேஷ் ஆகி யோர் பாராட்டு தெரிவித்தனர்.