குடவாசல், ஏப்.7- குடவாசலில் பேரூராட்சி மன்ற உறுப்பி னர்கள் முதல் கூட்டம் தலைவர் மகா லெட்சுமி முருகேசன் தலைமையில் வெள்ளி யன்று நடைபெற்றது. குடவாசல் பேரூராட்சி மன்ற உறுப்பி னர்கள் கூட்டத்திற்கு தலைவர் மகாலட்சுமி முருகேசன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் யசோதா முன்னிலை வகித்தார். துணை தலைவர் கே.குணசேகரன் துவங்கி வைத்தார். கூட்டத்தில், குடவாசல் அரசு மருத்துவ மனை சாலை மிகவும் பழுதடைந்த உள்ளது. உடனடியாக புதிய தார்சாலை அமைக்க வேண்டும், மேலும் அனைத்து வார்டுகளிலும் உள்ள குடிநீர் குழாய்கள், செயல்படாமல் உள்ள சின்செட் குடிநீர் தொட்டிகளை சீர்செய்து பொதுமக்கள் பயன்பாட்டு கொண்டு வரவேண்டும், வி.பி.சிந்தன் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் கழிப்பறைகள் ஏலம் விட வேண்டும், அரசு மருத்துவமனையில் சுகாதார மேம்படுத்தி, சுத்தமான குடிநீர் வசதி செய்தும் மேலும் 15- வார்டுகளில் உள்ள மக்கள் தேவைகளை வார்டு கவுன்சி லர்கள் தீர்மானமாக பேசிய அடிப்படையில் கவுன்சிலர்கள் கொண்டுவந்த 27- தீர்மானங்களும் அங்கீகரிக்கப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி மன்ற 2-அதிமுக உறுப்பினர்களை தவிர 13-உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.