districts

img

தைப்பொங்கலை முன்னிட்டு செரியலூரில் சிறுமிகள் மட்டுமே பங்கேற்கும் கொப்பித் திருவிழா

புதுக்கோட்டை, ஜன.15 - புதுக்கோட்டை மாவட்டம் செரிய லூர் கிராமத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு பெண் குழந்தைகள் மற்றும்  பெண்கள் பங்கேற்ற கொப்பித் திருவிழா  நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்க லம் அருகே செரியலூர் கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைகள் பருவ மெய்துவதற்கு முன்பு இந்த திருவிழா வில் கலந்து கொள்கிறார்கள். பிறந்த  சிறு பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் குழந்தைகளின் தாய் அல்லது சகோதரிகள் கலந்து கொள்கிறார்கள். திருவிழாவில் பங்கேற்கும், குழந்தை கள், பெண்கள் திருவிழா முடியும் வரை  விரதம் இருந்து கலந்து கொள்ளும் இந்த  விழாவை கொப்பித் திருவிழா என்று கூறு கின்றனர். செரியலூர் கிராமத்தில் பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் காலை யில் வெற்றுப் பொங்கல் வைத்து, 3 படையல் வைத்து ஒரு படையலை விரதம் இருப்பவர்கள் சாப்பிடவும் மற்ற  இரு படையல்களை, ஒரு ஓலை கூடை யில், இரு பெரிய சாணப் பிள்ளையார் களுடன், 91 சிறு சாணப் பிள்ளையார் செய்து, அதில் கூழைப் பூ, ஆவாரம் பூ, அருகம்புல், வேப்பிலை, கரும்பு, வெல்லம் ஆகியவற்றை வைத்து கிரா மத்தின் மையப்பகுதிக்கு கொண்டு வரு கின்றனர்.  அங்கு உள்ள பாலை மரத்தடியில் கிராமத்தினர் அனைவரும் ஒன்று கூடி கும்மியடித்து வழிபாடு செய்து, அணி வகுத்து தீர்த்தான் ஊரணி வரை கொண்டு சென்றனர். அங்கு கூடையில் உள்ள பொங்கல், வெல்லம், கரும்பு ஆகியவற்றை தனியாக எடுத்துக் கொண்டு மற்ற பொருட்களை குழியில்  புதைத்துவிட்டு ஒரு சிறு பிள்ளையாரை செய்து அருகில் உள்ள ராக்காச்சி அம்மன் கோயில் காட்டில் வைத்து வழி படுவர். கிராம மக்களின் நம்பிக்கை இந்த திருவிழாவை கொப்பித் திரு விழா என்று இப்பகுதி பொதுமக்கள் கூறு கின்றனர். சனிக்கிழமை நடைபெற்ற இந்த திருவிழாவில் ஏராளமான பெண்  குழந்தைகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் திருவிழாவைக் காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர்.  இதுகுறித்து அந்த பகுதி பெண்கள்  மற்றும் கிராம மக்கள் கூறுகையில், காத்தான் - தீர்த்தான் என இரு சகோத ரர்கள் முந்தைய காலத்தில் வாழ்ந்துள்ள னர். அதில் காத்தான் மகள் கொப்பி அம்மாள் சிறு குழந்தையாக இருக்கும்  போது, தனது பெரியப்பா தீர்த்தான் வீட்டுக்கு காட்டுப் பகுதியில் சென்று  காணாமல் போய்விட்டார். பல நாட்க ளுக்கு பிறகு ஊரின் மையப்பகுதியில் உள்ள பாலை மரத்தின் மேல் இருந்து  அம்மை நோய் தாக்கி இறந்து கீழே  விழுந்ததை பார்த்து கிராமமே சோகத் தில் ஆழ்ந்துள்ளது. அதன் பிறகு கொடிய அம்மை நோய்  வந்து யாரும் இறக்க கூடாது என்பதற் காக அம்மைக்கு பலியான கொப்பியம் மாளை நினைத்து சிறு பெண் குழந்தைகள் அம்மைக்கு எதிரான நோய் தடுப்பு மூலி கைகளுடன் ஊர்வலமாக சென்று தீர்த்தான் ஊரணியில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.  இந்தப் பழக்கம் பன்நெடுங்கால மாக உள்ளது. அதனால் காலங்கள் மாறி னாலும் கலாச்சாரத்தை மாற்ற விரும்பா மல் கிராமத்தினர் இந்த வழிபாட்டை செய்து வருகிறோம். வெளியூர், வெளி நாடுகளில் வசிப்பவர்களும் இந்நாளில் சொந்த ஊருக்கு வந்துவிடுவார்கள் என்றனர். கும்மி சுமார் பலநூறு ஆண்டுகள் பழமை யான பாலை மரத்தடியில் பெண்களும்,  பெண் குழந்தைகளும் கூடி கும்மிடியப் பதுடன் பாலை மரத்தை தெய்வமாக வணங்கி படையலிட்டு, அதன் பிறகே ஊர்வலமாக சென்று தீர்த்தான் ஊரணி  கரையில் படையலிட்டு வழிபட்ட பிறகு  வீட்டிற்கு சென்று விரதம் முடிக்கின்றனர்.