districts

img

கொடிநாள் நிதி வசூல்

அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் கொடிநாள் நிதி வசூலை மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார். மேலும் கடந்தாண்டு கொடிநாள் நிதி வசூல் இலக்கினை எய்திய 20 மாவட்ட அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழனன்று நடைபெற்ற முன்னாள் படைவீரர் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு, கொடிநாள் நிதி வசூலை தொடங்கி வைத்தார். பின்னர் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.