districts

img

கொடையூர் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் கொடையூர் ஊராட்சியில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) நிதியுதவியுடன் இமைகள் அறக்கட்டளை செயல்படுத்தும் கொடையூர் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபுசங்கர் வியாழனன்று துவக்கி வைத்தார். நிகழ்வில், திருச்சி மற்றும் கரூர் மாவட்ட நபார்டுவங்கி மேலாளர் மோகன் கார்த்திக், இணை இயக்குநர்.(வேளாண்மை) சிவசுப்பிரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்தகுமார், கே.விகே. வேளாண் அறிவியல் ஆராய்ச்சி கழகம் முனைவர்.திரவியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.