districts

மண்ணெண்ணெய் முறைகேடு: சட்ட நடவடிக்கைக்கு ஒப்புதல்

சிபிஎம் போராட்ட அறிவிப்பு வெற்றி

புதுக்கோட்டை, ஏப்.15-  மண்ணெண்ணெய் முறைகேடு குறித்து இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955- ன்கீழ் புகார் அளிக்க அதிகாரிகள் ஒப்புதல்  அளித்துள்ளனர். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட அறி விப்புக்கு கிடைத்த வெற்றியாகும். புதுக்கோட்டை நகரத்தில் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனைத்  தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில் மண்ணெண்ணெய் விநியோகத்தில் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.  குறிப்பாக 6 லிட்டர் வழங்கியதாக பதிவு செய்யப்பட்டு அட்டைதாரர்களுக்கு ஒரு லிட்டர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது விசார ணையில் தெரியவந்தது

. இதனைத் தொடர்ந்து மேற்படி முறை கேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏப்ரல் 17 அன்று கூட்டுறவு  சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.  

இதனைத் தொடர்ந்து கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் கட்சித் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். சனிக் கிழமையன்று இணைப்பதிவாளரின் நேர்முக உதவியாளரும், துணைப் பதிவாள ருமான சலீம் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கட்சியின் சார்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.நாக ராஜன், நகரக்குழு உறுப்பினர்கள் பழ. குமரேசன், எம்.ஏ.ரகுமான், அதிகாரிகள் சார்பில் பொதுவிநியோகத்திட்ட துணைப் பதிவாளர் கோபால் உள்ளிடோர் பங்கேற்ற னர். பேச்சுவார்த்தையில், மண்ணெண்ணெய்  முறைகேடு குறித்து இன்றியமையாப் பண்டங் கள் சட்டம் 1955-ன்கீழ் சட்டப்பிரிவு 10-ன் படி  உணவு கடத்தல் தடுப்பு போலீசாரிடம் புகார்  அளித்து நடவடிக்கை எடுப்பது எனத் தீர்மா னிக்கப்பட்டது.  

மேலும், மண்ணெண்ணெய் வழங்கும் நிலையத்தின் செயல்பாட்டை முடக்கி அந்தந்த  நியாயவிலைக் கடைகள் மூலமாக மண்ணெண் ணெய் விநியோகம் செய்வது எனவும் அதி காரிகளால் எழுத்துப்பூர்வமான உறுதி யளிக்கப்பட்டது. இது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த வெற்றியாகும்.