திருவனந்தபுரம், அக்.5- ஊடகங்களை வேட்டையாடும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம் நடத்தும் என்று சங்கத்தின் கேரள மாநிலச் செயலாளர் வி.கே.சனோஜ் கூறினார். ஒன்றிய பாஜக அரசைக் கண்டி த்து திருவனந்தபுரத்தில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநிலச் செயலா ளர் வி.கே.சனோஜ் பேசியதாவது: அடிபணியுமாறு ஊடகங்களை ஒன்றிய அரசாங்கம் மிரட்டுகிறது. தற்போதைய ஒன்றிய அரசின் வேட்டை ஊடகங்கள் அல்லது இடதுசாரிகளின் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சனை . பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த பத்திரிகையாளர்களை வேட்டையாடுகிறது நரேந்திர மோடி அரசு. கலாச்சாரத் தொழிலாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் வேட்டை யாடப்படுகிறார்கள். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நேரம் இது. இதுபோன்ற போராட்டங்களை நடத்த வேண்டிய இந்தியாவின் முக்கிய மான ஊடகங்கள், ஒன்றிய அரசின் நலன்களுக்காக பயந்து மொக்கை யான எதிர்வினைகளை படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. மலையாள ஊடகங்கள் எடுத்துள்ள நிலைப்பாட்டை அவர்களின் முதல் பக்கத்தைப் பார்த்தாலே புரியும். இவை அனைத்தும் இந்த நாட்டின் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. நமது ஜன நாயகம் வலுவாக முன்னேற வேண்டு மானால், ஊடகங்கள் துணிச்சலான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இல்லையெனில் இந்தியா என்ற கருத்தே இங்கு மறைந்துவிடும். பன் மைத்துவத்தை அழித்து மத தேசத்தை நிறுவும் நடவடிக்கை. இதுபோன்ற நட வடிக்கைகளுக்கு எதிராக இளைஞர்க ளைத் திரட்டி வலுவான போராட்டத்தை வாலிபர் சங்கம் நடத்தும். இவ்வாறு அவர் கூறினார்.