districts

img

காட்டுச்சேரி, எடுத்துக்கட்டி சாத்தனூரில் புதிய மின் மாற்றிகள் திறப்பு விழா

மயிலாடுதுறை, ஜூன் 17 -

    மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே யுள்ள காட்டுச்சேரி, எடுத்துக்கட்டி சாத்தனூர் ஆகிய ஊராட்சிகளில் புதிய மின் மாற்றிகள் திறப்பு விழா வெள்ளியன்று நடைபெற்றது.

    விழாவிற்கு மின்வாரிய செயற்பொறியாளர் கே.விஸ்வநாதன், செம்பனார்கோவில் ஒன்றிய குழு  தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட திமுக துணை செய லாளர் ஞானவேலன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சித்திக், திமுக ஒன்றிய செயலாளர் எம்.அப்துல் மாலிக்,  மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அப்துல் வஹாப்  மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இரா மலிங்கம், பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னர் நிவேதா எம்.முருகன் ஆகியோர், காட்டுச்சேரி ஊராட்சி காராம்பள்ளம், எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சி பள்ளிவாசல் பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் இரண்டு புதிய மின்மாற்றிகளை பொதுமக்கள் பயன் பாட்டிற்காக தொடங்கி வைத்து உரையாற்றினர்.

   நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணைத் தலைவர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் எஸ். விஜய லட்சுமி சாமிநாதன், பைலட், உதவி மின் பொறியாளர் எஸ்.அன்புசெல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.