districts

கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற கோரிக்கை

கரூர், ஆக.7-

     தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட 13-வது பேரவை சங்க அலு வலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

      பேரவைக்கு மாவட்டத் தலைவர் எம்.எஸ்.அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சி.கண்ணன் வரவேற்றார். சங்கத்தின் மாநில துணைத்  தலைவர் மொ.ஞானத்தம்பி பேரவையை துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்ட தலை வர் ஜி.ஜீவானந்தம், தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாநில துணைத்தலைவர் மு. செல்வராணி ஆகியோர் சிறப்புரையாற்றி னார்.

    மாவட்டத்தின் புதிய தலைவராக எம்.எஸ்.அன்பழகன், மாவட்டச் செயலா ளராக பொன்.ஜெயராம், மாவட்டப் பொரு ளாளராக எல்.பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர்களாக வி.முரு கேசன், என்.செல்வன், மாவட்ட துணைச் செயலாளராக எஸ்.தங்கபாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட இணைச் செயலாளர் ஆ.சங்கர் நன்றி கூறினார்.

    கரூர் மாவட்டத்தில் காலை மற்றும்  மாலை நேரங்களில் முக்கிய வழித்தடங்  களில் மகளிர் பேருந்துகள் இயக்க வேண்  டும். கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை யை நான்கு வழிச்சாலையாக மாற்றிய மைக்க வேண்டும். பகல் நேரத்தில் கரூரிலி ருந்து சென்னைக்கு செல்வதற்கு புதிய ரயில் இயக்க வேண்டும். சாலைப் பணியா ளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை  பணிக்காலமாக அறிவித்து அரசாணை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.