கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் கட்சி கிளை உறுப்பினர் நல்லுசாமி- சரஸ்வதி குடும்ப காதணிவிழா நடைபெற்றது. நல்லுசாமி மகன் வழி பேரக்குழந்தைகள் கிரிசன், ருத்விகா ஆகியோரது காதணி விழாவில் சிஐடியு சங்க கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தத்திடம் நிர்மல் பள்ளி நிதியாக ரூ.2,500 வழங்கினர். இதில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கே.சண்முகம், ஒன்றியக்குழு உறுப்பினர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.