districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மீது போதை கும்பல் கொலை வெறித் தாக்குதல்

கரூர், அக்.13 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மீது  போதை கும்பல் கொலை வெறித்  தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால்  காயமடைந்தவர்கள் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியக் குழு உறுப்பினர் வி.நாகரா ஜன், தனது மகனுடன் வியாழனன்று (அக்.12) இரவு 9 மணியளவில் கரூரில்  இருந்து பழைய ஜெயங்கொண்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண் டிருந்தார்.  அப்போது பிச்சம்பட்டி வாய்க்கால்  பாலம் அருகே போதைப் பொருட்கள்  உட்கொண்ட உதயநிதி உட்பட ஆறு பேர் கொண்ட கும்பல், தந்தை-மகனை வழிமறித்து, பீர் பாட்டில் மற்றும் கட்டையால் கடுமை யாக தாக்கியுள்ளது. இதில் படுகாய மடைந்த நாகராஜன், அவரது மகன்  விக்னேஸ்வர் ஆகியோர் கரூர் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். நாகராஜனுக்கு இரண்டு பற்கள் உடைந்ததோடு தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது மகனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் உபயோகம், விநி யோகம் மற்றும் சமூக விரோதிகளின் அட்டூழியம் அதிகளவில் இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்தக் கோரி வாலி பர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த ஜனவரியில் மாரத்தான் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட்டது.

போதைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய, அப்போதைய மாய னூர் காவல்துறை ஆய்வாளர் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்க  நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். போதை கும்பலால் நாகராஜனும், அவரது மகனும் தாக்கப்பட்டதற்கு கட்சி யின் கரூர் மாவட்டக் குழு கடும் கண்ட னத்தை தெரிவித்துக் கொள்கிறது. இச்சம்பவத்தில் கரூர் மாவட்ட காவல் துறையினர், கொலை முயற்சி பிரிவு களில் வழக்குப் பதிவு செய்து, குற்ற வாளிகள் அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர்  மாவட்டக் குழு சார்பில் வலியுறுத் துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகராஜன் மற்றும்  அவரது மகனை நேரில் சந்தித்து, கட்சி யின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.ஜீவானந்தம், சி.முருகேசன், கரூர் மாநகரச் செயலாளர் எம்.தண்ட பாணி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். கோச்சுமின், கிருஷ்ணராயபுரம் ஒன்றி யச் செயலாளர் தர்மலிங்கம், ஒன்றியக்  குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகி யோர் நலம் விசாரித்தனர்.