கரூர், மார்ச் 29 - இந்தியா கூட்டணி சார்பில் காங்கி ரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டி யிடுகிறார். இவர் கரூர் தொகுதிக்குட்பட்ட உப்பிடமங்கலம், புலியூர் பேரூராட்சி கள், காக்காவாடி, புத்தாம்பூர், பாக நத்தம், மணவாடி, வெள்ளியணை, ஜெகதாபி, மேலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிக்குட்பட்ட கிராமப் புறங்களில் வெள்ளியன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். வெயிலை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து, மலர்தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். வாக்குச் சேகரிப்பின் போது வேட்பா ளர் ஜோதிமணி பேசுகையில், “கரூர் நாடாளுமன்ற தொகுதியில் பல்வேறு இடங்களில் பாலங்கள் கட்டி முடிக்கப் பட்டுள்ளன. பேருந்து நிழற்குடைகள், குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு வேண்டிய பல்வேறு வசதிகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றிக் கொடுத்துள்ளேன். மீண்டும் தனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் அதிக நிதியைப் பெற்று கரூர் தொகுதி மக்களுக்கு நலத்திட்ட பணிகளை செய்து தருவேன்” என்றார். இதில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, கிருஷ்ணராயபுரம் சட்ட மன்ற தேர்தல் பொறுப்பாளர் ராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதி பாசு, தாந்தோணி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ரகுநாதன், மேற்கு ஒன்றி யச் செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.