அறந்தாங்கி, ஜூன் 4 - 18 ஆவது அகில உலக கோஜூ ரியோ கராத்தே போட்டிகள் மலேசியா நாட்டின் பேராக் மகாணத்தில் இப்போ நகரத்தில் கடந்த மே 27, 28, 29 தேதிகளில் நடைபெற்றது. கட்டா, குமித்தே, டீம் கட்டா, டீம் குமித்தே போன்ற பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் செயல்பட்டு வரும் ரைசிங் கோஜு கராத்தே பள்ளியை சேர்ந்த கராத்தே வீரர்கள்-வீராங்கனைகள், பயிற்சியாளர் ரென்ஷி எஸ்.ஆண்ட்ரூ தலைமையில் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் ஹர்ஷவர்தன் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி, இவாஞ்சலின் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி, அபினேஷ் 2 வெண்கலப் பதக்கம், கிறிஸ்டினா கேத்ரின் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வென்று சாதனை படைத்தனர். நாடு திரும்பிய இவர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.