districts

img

கராத்தே பெல்ட் தேர்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை, மார்ச் 16 - மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் டி.இ.எல்.சி தொடக்கப் பள்ளி யில் கராத்தே பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பெல்ட் தேர்வு செய்து சான்றி தழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  மாநில கராத்தே அணி மேலாளரும், மயிலாடுதுறை மாவட்ட ஸ்போர்ட்ஸ்  கராத்தே சங்கத்தின் செயலாளருமான சென்சாய் கராத்தே கதிரவன், மயிலா டுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியருக்கு கராத்தே பயிற்சி யளித்து மாவட்ட, மாநில மற்றும் தேசிய போட்டிகளில் வெற்றி பெறச் செய்து வருகிறார். கராத்தே பாடத்திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு     செய்த வர்களுக்கு பொறையாரில் நடந்த ஆலன் திலக் சர்வதேச கராத்தே பள்ளி யின் பெல்ட் தேர்வு நடைபெற்றது. இதில் மாணவி ஜஷிதா முதல் மதிப்பெண் பெற்றார். முதன்மை மதிப்பீட்டாளராக ஆசிய கராத்தே நடுவர் சென்சாய் கார்த்திகேயன் பணி யாற்றினார். பொறையார் காவல் நிலைய   உதவி ஆய்வாளர் நடராஜன், திரு.வி.க அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் நெடுஞ்செழியன், பொறை யார் டி.இ.எல்.சி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை சாந்தி   பியூலா, டிஎஸ்பி சிறப்பு படை தலைமை காவலர் தீபக்ராஜ் ஆகியோர் தேர்ச்சி பெற்ற  மாணவ-மாணவியருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினர். நிறைவாக பயிற்சி யாளர் சென்சாய் கராத்தே  கதிரவன் நன்றி கூறினார்.