காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தில் கறம்பக்குடியை இணைக்க பரிசீலிக்கப்படும் எம்.சின்னதுரை எம்எல்ஏ கேள்விக்கு, அமைச்சர் துரைமுருகன் பதில்
புதுக்கோட்டை, பிப்.24 - காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதிகளை இணைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என்று சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரையின் கேள்விக்கு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுரு கன் பதிலளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னதுரை, பல்வேறு கோரிக் கைகளை தொடர்புள்ள துறை அமைச்சர் களுக்கு எழுத்துப் பூர்வமாக பதில ளிக்கும் வகையில் கேள்விகளாக எழுப்பி இருந்தார். அதற்கு சம்பந்தப் பட்ட அமைச்சர்கள் அளித்துள்ள பதில்கள் பின்வருமாறு: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக் குடி பகுதிகளையும் காவிரி-வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தின் மூலம் பாசனம் பெறும் பகுதிகளாக இணைத்திட அரசு ஆவன செய்யுமா என்ற கேள்விக்கு, இக்கோரிக்கை மீது அரசு பரிசீலனை செய்யும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுரு கன் பதிலளித்துள்ளார். கறம்பக்குடி மற்றும் கந்தர்வ கோட்டை பகுதிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அரசு முன்வருமாக என்ற கேள்விக்கு, கறம்பக்குடி மற்றும் கந்தர்வகோட்டையில் புதிதாக ஒருங் கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிட இடம் தேர்வு செய்யும் பணி வேளாண்மைத்துறை மற்றும் வரு வாய்த்துறை அலுவலர்களால் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தகுந்த இடம் கண்டறியப்பட்டவுடன் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத் தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரி வாக்க மையம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை-உழ வர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் களை புதிதாக நியமனம் செய்ய அரசி டம் செயற்குறிப்பு உள்ளதா என்ற கேள் விக்கு, 4848 நலவாழ்வு மையங்களில் தலா ஒரு செவிலியர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தில், மாவட்ட நல வாழ்வு சங்கங்கள் மூலமாக நிரப்பப் பட்டு வருவதாக மருத்துவம்-மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். சுற்றுலா பேருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்க் கும் வகையில் வட்டப் பேருந்து இயக்க அரசு முன்வருமா என்ற கேள்விக்கு, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்து டன் இணைந்து ஒரு சுற்றுலா பேருந்து இயக்க முயற்சி நடைபெற்று வருவதாக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலை யங்கள் துறை அமைச்சர் கா.ராமச்சந்தி ரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் முழுவதும் மார்ச் 1-இல் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் சிறுபான்மை மக்கள் நலக்குழு முடிவு
தஞ்சாவூர், பிப்.24- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், மாவட்டத் தலை வர் பி.எம்.காதர் உசேன் தலைமையில் தஞ்சாவூர் சரோஜ் நினைவகத்தில் வெள்ளிக் கிழமை மாலை நடைபெற்றது. மாநிலச் செயலாளர் பி.செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் என்.குருசாமி, மாவட்டப் பொருளாளர் ஹெச்.அப்துல் நசீர், மாவட்ட துணைத் தலைவர் ஜாஹிர் உசேன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், “அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம், மக்கள் ஒற்றுமை யைக் கட்டிக் காப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து, மாநிலம் முழுவதும் நடை பெற்று வரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதி யாக, மார்ச் 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை, தஞ்சாவூர் கீழவாசல் ஆட்டுமந்தை தெருவில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத்துவது. கும்பகோணம், பட்டுக்கோட்டை உட்பட மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் இதே போல் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத்து வது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலை மையில், “வெறுப்பு அரசியலை அம்பலப் படுத்துவோம், மக்கள் ஒற்றுமையை பாது காப்போம்” என வலியுறுத்தி, மார்ச் 9 அன்று பாபநாசம் தாலுகா, அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி முதல் பாபநாசம் வரை நடை பெறவுள்ள சுமார் 8 கி.மீ தூர நடைபயணத் தில், சிறுபான்மை மக்களை பெருமளவு பங்கேற்கச் செய்வது” என முடிவு செய்யப் பட்டது.
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, பிப்.24- முன்னாள் படைவீரர் நலத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில பொதுக் குழு கூட்டம் சனிக்கிழமை திருச்சி கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சுகுமாரன் தலைமை வகித்தார். வேலை அறிக்கையை மாநில பொதுச் செயலா ளர் இளங்கோவன் வாசித்தார். வரவு-செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் ரமேஷ் சமர்ப்பித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி வாழ்த்துரை ஆற்றினார். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவராக ந.சுகுமாரன், மாநில துணைச் செயலா ளராக அ.ராஜன், மாநிலப் பொருளாளராக கோ.ரமேஷ் ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னதாக மாநில துணைச் செயலாளர் ராஜன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் சங்கர சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
பள்ளியில் பாத பூஜை நடத்துவதா?
இந்திய மாணவர் சங்கம் கண்டனம்
புதுக்கோட்டை, பிப்.24 - புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பாதபூஜை நடத்தியதற்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் அ.சந்தோஷ்குமார், செயலாளர் சா.ஜனார்த்தனன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: புதுக்கோட்டை நகரில் வைரம்ஸ் மெட்ரிக் குலேசன் என்ற தனியார் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வெள்ளிக்கிழமை ஹோமம் நடத்தி பள்ளி மாணவர்களை வைத்து, அவர் களின் பெற்றோர்களுக்கு பாதபூஜை நடத்தி யுள்ளனர். மேலும், அன்று முழுவதும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வருகிற பொதுத் தேர்வில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப் பெண் எடுக்க வேண்டும் என்பதற்காகவும், அப்பள்ளி வளம்பெற வேண்டியும் இந்தப் பாத பூஜை நடைபெற்று உள்ளது. பல துறையிலும் விஞ்ஞானம் வளர்ச்சி பெற்று இருக்கிற இந்தக் காலத்தில், அறி வியலும், கணிதமும், சமூக அறிவியலும் உள்ள பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற வேண்டி பாத பூஜை நடத்துவது விநோதமும், வேடிக்கையும் மட்டுமல்ல. இதுபோன்ற மூடப் பழக்கங்களை மாணவர்கள் மத்தியில் திணிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே இதுபோன்ற பிற்போக்கான மதச் சடங்குகள் மேற்கொள்ளும் கல்வி நிலையங் கள் மீது தமிழ்நாடு அரசும், பள்ளிக் கல்வித் துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வங்கி அலுவலர் போல் பேசி வழக்கறிஞரிடம் பணம் மோசடி
தஞ்சாவூர், பிப்.24 - தஞ்சாவூரைச் சேர்ந்த வழக்கறிஞரின் கைப்பேசிக்கு பிப்.21 அன்று அழைப்பு ஒன்று வந்தது. அதில், பேசிய மர்ம நபர், தான் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் நுகர்வோர் சேவைப் பிரிவு அலுவலர் என்றும், தங்களது கே.ஒய்.சி.யை புதுப்பிக்க வேண்டும் என்றும், ஓ.டி.பி. எண்ணை தருமா றும் கூறினார். இதை நம்பிய வழக்கறிஞர் ஓ.டி.பி. எண்ணைக் கூறினார். இதைத் தொடர்ந்து, வழக்கறிஞரின் வங்கிக் கணக் கிலிருந்து ரூ.3.09 லட்சம் இணையவழி மூலம் திருடப் பட்டது. இதுகுறித்து தஞ்சாவூர் இணையதளக் குற்றப் பிரிவில் வழக்கறிஞர் புகார் செய்ததன் பேரில், காவல் துறையி னர் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண் டுள்ளனர்.
சாரண நிறுவனர் பிறந்த தினம்
கும்பகோணம் பிப்.24- சாரணர் படைப் பிரிவை தோற்றுவித்து செயல்படுத்திய நிறுவனர் பேடன் பவுல் பிறந்த தினத்தை முன்னிட்டு, தஞ்சா வூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெற்றி திரு நாவுக்கரசு தலைமையேற்றார். சாரண பொறுப்பாசிரியர் ரமணி சிறப்புரையாற்றினார்.
ஓய்வூதிய காலப் பலன்களை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை, பிப்.24 - ஓய்வூதிய காலப் பலன்களை உடனடியாக வழங்க வலி யுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐ டியு) சார்பில் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சித்தை யன் தலைமை வகித்தார். ஓய்வூதியர் சங்க நிர்வாகி பி. ஆவுடைமுத்து உள்ளிட்டோர் பேசினர். மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதியம், ஓய்வூதிய காலப் பலன்களை முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அரசு பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர்களுடன் இரவு உணவு அருந்திய ஆட்சியர்
நாகர்கோவில், பிப்.24 உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் பல்வேறு துறை அலுவலகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் மற்றும் துறை அலுவலர்கள் தனித்தனியாக கடந்த 21.02.2024 அன்று காலை 9 மணி முதல் 22.02.2024 அன்று வரை ஆய்வு மேற்கொண்டார்கள். குறிப்பாக உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தங்கி பயின்று வரும் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் கலந்துரையாடி, அவர்களுடன் இரவு உணவு அருந்தியது பழங்குடியின மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, அவரிடம் பழங்குடியின மாண வியர்கள் மேற்படிப்பு மேற்கொள் வதற்கான அறிவுரைகளை கேட்டறிந்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கனகராஜ், திருவட்டார் வட்டாட்சியர் புரந்தரதாஸ் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முத்தரப்பு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை
பெரம்பலூர், பிப்.24 - மின்வாரிய பிரிப்பு, முத்தரப்பு ஒப்பந்தம், பறிபோகும் சலுகை உரிமைகள் ஆகிய கோரிக்கைகளை வலியு றுத்தியும், முத்தரப்பு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்யக் கோரியும் பெரம்பலூரில் சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு, தமிழ்நாடு பவர் இன்ஜினியர் ஆர்கனைசேசன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. காலையில் புதிய பேருந்து நிலையம் முன்பும், மாலை 5 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி மண்டல செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் பன்னீர்செல்வம், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு இரா.ராஜகுமாரன், மாநில துணைத் தலைவர் ஜி.பஷீர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரை யாற்றினர்.
அண்ணாமலை ஒரு பொய்யர் மாணிக்கம் தாகூர் விமர்சனம்
மதுரை, பிப்.24- அண்ணாமலை கூறுவதை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றார் விருது நகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர். வெள்ளியன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. ஏனெனில் மோடி தலைமை யிலான அரசு பெண்களுக்கு விரோதமனாது, இளை ஞர்களுக்கு எதிரானது, விவசாயிகளுக்கு எதிரானது என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர் என்றார். மோடியின் தமிழகம் வருகை குறித்து செய்தி யாளர்கள் கேட்டதற்கு, “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறந்து வைக்க வருகிறார் என்றால் மகிழ்ச்சியடையலாம். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருவதில் மகிழ்ச்சி யடைவதற்கு ஏதுமில்லை என்றார். அண்ணாமலை எப்போதும் (உண்மை) பொய்தான் பேசுவார். அந்தப் பொய்யை பூசனிக்காய்க்குள் மறைக்கப்பார்க்கிறார். அவர் கூறுவதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவருக்கு ஆளு நருக்கும் முதல்வருக்குமே வித்தியாசம் தெரிய வில்லை.” என்றார்.
புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் திட்ட நடைமுறையை கைவிடுக! ஆயக்குடி மரத்தடி மையம் கோரிக்கை
பழனி, பிப்.24- புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தவுள்ளது. இதற்கு முன்னோட்டமாக சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறையை ஒன்றிய அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. புத்தகங்களை பார்த்து எழுதுவதால் மாணவரின் புரிதல், பகுப்பாய்வு மேம்படும் என கூறி இந்த முறையை நடைமுறைப்படுத்துவதாக தெரிகிறது. ஆனால், போட்டி நிறைந்த உலகில் இந்த முறை மாணவர்களை மேலும் பின்னோக்கியே அழைத்து செல்லும். போட்டித் தேர்வுகளை பொறுத்தவரை 6 முதல் 12 பாடங்களை மைய மாக வைத்தே நடத்தப்படுகிறது. பார்த்து எழுதும் முறையை அமல்படுத்தினால் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் அரசு பணி பெறுவதும் கடினமாகி விடும். எனவே, பார்த்து எழுதும் முறையை ஒரு செய்முறை பயிற்சியாக மட்டும் அமல்படுத்தலாம். இதற்கு மதிப்பெண்ணோ அல்லது வேறு எந்தவித மதிப்பீடும் வழங்காமல் நடைமுறை செய்யலாம். கொரோனா காலத்தை மையமாக கொண்டு புத்தகங்க ளை பார்த்து எழுதும் நடைமுறை வேண்டாம். பல சவால்கள் மட்டுமல்ல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே இந்தமுறை நடைமுறைப்படுத்து வதை கைவிடவேண்டும் என ஆயக்குடி மரத்தடி மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.