புதுக்கோட்டையில் கண்ணதாசன் இலக்கியச் சாரல் விழா நடைபெற்றது. விழாவிற்கு கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். கண்ணதாசன் இலக்கிய சாரல் மற்றும் குளோபல் நிறுவனம் இணைந்து நடத்திய இவ்விழாவில், பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் ஜீவிக்கு, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ‘இலக்கிய விருது’ வழங்கினார். கண்ணதாசன் இலக்கிய சாரல் நிறுவனர் திருமலை சேகர், தலைவர் ஜெயக்குமார், செயலாளர் முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.