தூத்துக்குடி, ஜன. 25- தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகன மழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பு செய்திட மாவட்டத்திலுள்ள பெரு நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவதற்காக “இடுக்கண் களைவோம்” என்ற இணையதளத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துவக்கி வைத்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் தூத்துக்குடி மற்றும் ஏரல் வட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்காக 7 மகளிர் சுயஉதவிக்குழுக் களை சேர்ந்த மகளிர்களுக்கு ரூ.1.40 இலட்சம் மதிப்பிலான 7 கிரைண்டர்களை வழங்கியுள்ளார். இந்த கிரைண்டர்களை மகளிருக்கு கனிமொழி எம்.பி., வழங்கினார். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி இடுக்கண் களைவோம் நிவாரணத் திற்காக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியரி டமும், சுகாதார நிலையங்களை சீரமைப்பதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட ரூ.9.58 இலட்சத்திற்கான காசோலையினை துணை இயக்குநரிடமும் (சுகாதாரப்பணிகள்) வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.