districts

img

கமுதியில் வாரச்சந்தை வியாபாரிகள் சங்க பேரவை

இராமநாதபுரம், ஜன.2- இராமநாதபுரம் மாவட்  டம் கமுதி வட்டார வாரச் சந்தை வியாபாரிகள் சங்  கத்தின் 20-வது ஆண்டு  பேரவை எம்.ராமு தலைமை யில் நடைபெற்றது. இதில், வேலை அறிக் கையை செயலாளர் ஏ. அண்ணா துரை முன்வைத்  தார். வரவு-செலவு அறிக்கை யை வி.ஆலடிஸ்வரன் முன்  வைத்தார். சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.முத்து விஜயன் துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்டத் தலைவர்  எஸ்.ஏ.சந்தானம் நிறைவுரை  ஆற்றினார். அய்யனார் நன்றி கூறினார். பேரவையில், தலைவ ராக எம்.ராமு, செயலாளராக ஏ.அண்ணாதுரை, பொருளா ளராக வி.ஆலடிஸ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.  வாரச்சந்தைகளில் வாடகை வசூல் செய்யும் குத்  தகை முறையை ரத்து செய்ய  வேண்டும், அரசு நிர்வாகமே சந்தை வியாபாரிகளிடம் நேரடியாக கடை வாடகை ரசீது கொடுத்து வசூல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.