தஞ்சாவூர், ஜூலை 5-
தஞ்சாவூர் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை ரயில் பயணி கள் சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பேரா வூரணி நகர வர்த்தக கழக தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன் தலை மையில் நடைபெற்றது.
வர்த்தக கழக பொருளாளர் சாதிக் அலி வரவேற்றார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில், பேராவூரணி, அதிராம்பட்டினம் ரயில் நிலையங்களில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே காரைக்குடி - சென்னை வழித்தடத்தில் இயக்கப்பட்ட கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். காரைக்குடி - சென்னை வழித்தடத்தில் இருமார்க்கத்தி லும் பகல்-இரவு நேர விரைவு ரயில்களை இயக்க வேண்டும். பேராவூரணி, அதிராம்பட்டினம் ரயில் நிலைய மேம்பாட்டிற் காகவும் தேவைகளுக்காகவும், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வர்த்தக கழக செயலாளர் திருப்பதி நன்றி கூறினார்.