அறந்தாங்கி, செப்.1 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த தாந்தாணி ஊராட் சிக்குட்பட்ட செட்டிக்காடு கிராமத்தில், புதிய பறவை கபாடி குழு சார்பாக 27 ஆம் ஆண்டு மாநில அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது. போட்டியில் சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26-க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டனர். இதில் முதல் நான்கு இடங்கள் பிடித்த கபாடி வீரர்களுக்கு ரொக்கப் பரிசும் கோப்பை களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தாந்தாணி ஊராட்சி மன்றத் தலைவர் சிவ.மெய்யநாதன் மற்றும் செட்டிக்காடு கிராம மக்கள், இளைஞர்கள், கபாடி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.