திருவில்லிபுத்தூர், அக்.8- கலசலிங்கம் பல்கலையில் நிறுவனர் ‘கல்வி வள்ளல்’ டி.கலசலிங்கம் ‘நூற் றாண்டு பிறந்த நாள் நினைவுக் கோப்பை’ மாநில கபடி போட்டிகள், துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. சுழற்சி முறையில் (லீக்) நடைபெற்ற போட்டியில் 12 கல்லூரி அணிகள் கலந்து கொண்டன. இதில், கலசலிங்கம் பல்கலை, அணி முதல் இரண்டு இடங்களையும், கோவை தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பொறியி யல் கல்லூரி 3-ம் இடத்தையும், இராஜ பாளையம் ஸ்ரீபாலகிருஷ்ணா கல்லூரி 4-ம் இடத்தையும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை கள், சான்றிதழ்கள் பதக்கங்களை மாண வர் நல இயக்குநர் ஏ.சாம்சன் நேசராஜ் வழங்கினார்.