districts

img

சிபிஎம் முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளராக கே.பழனிச்சாமி தேர்வு

முத்துப்பேட்டை, நவ.11 - சிபிஎம் முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளராக கே.பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றிய 24 ஆவது மாநாடு எடையூரில் நடைபெற்றது.  மாநாட்டு கொடியை கே.வி.இராஜேந்திரன் ஏற்றினார். மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மாநாட்டை துவக்கி வைத்தார். வீரமணி மற்றும் கவிதா ஆகியோர் தலைமை வகித்தார்.  இதில், 11 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டு, அதில் கே.பழனிச்சாமி ஒன்றியச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு நிறைவுரையாற்றினார். முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி தலைமை மருத்துவமனையாக மாற்ற வேண்டும். பாசன வாய்க்காலில் வெங்காயத் தாமரையை அகற்ற வேண்டும்.  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக தொழில் நிறுவனங்கள் துவங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.