திருவாரூர், அக்.24- திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றிய 24 ஆவது ஒன்றிய மாநாடு அம்மையப்பனில் தோழர் எம்.சண்முகம் நினைவரங்கத்தில் வியாழனன்று நடைபெற்றது. மாநாட்டு செங்கொடியை தோழர் பி.பரமசிவம் ஏற்றி னார். கே.சித்ரா,கே.செந்தில் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்க்குழு உறுப் பினர் டி. முருகையன் துவக்க உரையாற்றினார். ஒன்றியசெய லாளர் டி.ஜெயபால் வேலைய றிக்கை முன்வைத்தார். மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் எம்.சேகர் வாழ்த்துரையாற்றினார். 13-பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டு புதிய ஒன்றிய செயலாராக கே.கோபிராஜ் தேர்வு செய்யப்பட்டார். புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி நிறைவுறை யாற்றினார். கொரடாச்சேரி ஒன்றியத்தில் கடைமடை வரையில் உள்ள வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும், முசிறியம்-திட்டாணிமுட்டம் பாலத்தை புதிய பாலமாக அமைக்க வேண்டும், கோவில் குடியிருப்பு மனைகளில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பட்டா வழங்கிட உரிய நடவடிக்கை அரசு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.