districts

img

லட்சாதிபதி ஆக்குவதாக கூறிவிட்டு பெண்கள் வேலைவாய்ப்பை பறித்த மோடி அரசு

திண்டுக்கல், பிப்.5- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சனிக்கிழமையன்று நடைபெற்ற மாவட்ட மகளிர் கருத்தரங்கில் கலந்து கொண்டு முன் னாள் சட்டமன்ற உறுப்பி னர் கே.பாலபாரதி பேசினார். “நாங்கள் வேலைவாய்ப்புக்காக பதிவு  செய்திருந்த காலத்தில் வேலை வாய்ப்ப கத்தில் சில ஆயிரம் பேர்கள் தான் பதிவு  செய்திருந்தனர். இன்றைக்கு வேலையில் லாத இளைஞர்கள்  ஒரு கோடிக்கு மேல் பதிவு செய்திருக்கிறார்கள். அரசாங்க பணிக்கு ஆள் எடுக்கக் கூடாது என்று மத்திய அரசு மாநில அரசு களுக்கு உத்தரவிடுகிறது. புதிதாக பணி  நியமனம் செய்ய வேண்டும் என்றால்  ஒன்றிய பாஜக அரசின் நிதி அமைச்சகத்தி டம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை  உருவாக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் பொருளாதாரத்தைக் கண்காணித்து மதிப்பீடு செய்யும் அரசு  நிறுவனம், 2004-ல் பெண்களின்  வேலை வாய்ப்பு 35 விழுக்காடாக  இருந்தது. 2022ல் 25 விழுக்காடாக  குறைந்துள்ளது என்று அந்த அரசு நிறு வனம் சொல்கிறது. ஒரு பல்கலைக்கழக ஆய்வறிக்கை, என்ன சொல்கிறது என்றால் இந்தியாவில் தனியார் மற்றும் அரசுத் துறையில் வேலை செய்வது 10 விழுக்காடு பெண்கள் தான். இந்த 10 ஆண்டு ஒன்றிய பாஜக ஆட்சி காலத்தில்  பெண்களை தொழில் துறையிலிருந்து வெளியேற்றுகிற வேலையைத் தான் இது வரை செய்து வந்துள்ளது. குடியரசுத்  தலைவர் மற்றும் நிதி நிலை அறிக்கையி லும் நாங்கள் 3 கோடி பெண்களை  லட்சாதிபதிகளாக ஆக் கப் போகிறோம் என்று அறிவிக்கிறார்கள்.  2004-க்குப் பிறகு, 2014 முதல்  2024-ஆம் ஆண்டு வரை கடந்த 10  ஆண்டுகளில் பாஜகவின் மோடி ஆட்சி யில் தான் பெண்களின் வேலை வாய்ப்பை  படிப்படியாக குறைத்து பெண்களை வஞ்சித் துள்ளது.  அதானி, அம்பானியோடு போட்டியிடமுடியுமா?  பெண்களுக்கு புதிய வேலை வாய்ப்பு  உருவாக்கப்படவில்லை. இந்நிலையில்  தான் வங்கியில் நூறு ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் தருகிறோம் என்று  ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளந்து விட்டுள்ளார்.

அதானி, அம்பானி செய்யும் தொழில்களுக்கு போட்டியாக இந்த பெண்கள் தயாரிக்கும்  மெழுகுவர்த்தி தொழில் ஈடுகொடுக்குமா? பெரிய பெரிய மால்களில் காய்கறிகளை குவித்து விற்கிறார்கள். வங்கியில் லட்சம்  ரூபாய் கடன் வாங்கி தெருவில் கூறு கட்டி காய்கறிகளை விற்க முடியுமா? வீதியில் நிறுத்தப்பட்டுள்ள பெண்கள் மோடி அரசின் பசப்பு வார்த்தைகளை  நாம் நம்பக்கூடாது. ஏன் எனில் பாஜக மோடி அரசு ஆட்சிக்கு வந்த இந்த 10  ஆண்டுகளில் வங்கிகள், இன்சூரன்ஸ்,  ரயில்வே, தபால், தந்தி என அனைத்து  துறைகளும் தனியார் மயமாக்கப்பட் டுள்ளன. அங்கிருந்து தொழிலா ளர்களின் வேலை வாய்ப்புகள் பறிக்  கப்பட்டுள்ளன. பெண்களின் வேலை வாய்ப்புகளும் சத்தமில்லாமல் பறிக்கப் பட்டு வீதியில் நிறுத்தப்பட்டுள்ளார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.  இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில் இணை அமைப்பாளர் ஏ.ஜெசி வரவேற்றார். மாவட்ட மகளிர் துணைக்குழு உறுப்பினர்கள் கல்பனா, ஜெயக்கொடி, மயில், ராஜாத்தி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் செல்வராணி வாழ்த்தி பேசினார். மாவட்டத்  தலைவர் எஸ்.முபாரக்அலி, நன்றி கூறினார்.  அரசு அலுவலகங்களில் பெண்கள்  மீதான பாலியல் வன்கொடுமை களுக்கு தீர்வு காணும் விசாகா கமிட்டி  திண்டுக்கல் மாவட் டத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மா னங்கள் இக்கருத்தரங்கில் நிறைவேற்றப் பட்டன.