வாச்சாத்தி பழங்குடியின மக்களின் கொடுமைகளுக்கு எதிராக போராடி நியாயம் பெற்றுத் தந்தவரும், தமிழ்நாடு அரசால் டாக்டர் அம்பேத்கர் விருது பெற்றவருமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகத்திற்கு வெள்ளியன்று மயிலாடுதுறையில், கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.