மயிலாடுதுறை, பிப்.17- மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் பேரூ ராட்சிக்குட்பட்ட 2 வார்டு கவுன்சிலர் பதவிக்காக மார்க்சிஸ்ட் வேட்பாளர் கரிகாலன் மக்களின் ஆதரவுடன் களமிறங்கி கட்சி தலைவர்கள், தொண்டர்களுடன் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்த வார்டுக்குட்பட்ட பகுதியான மருவத்தூர் கிரா மத்தில் கட்சி உறுப்பினர் ஒருவரின் வீட்டில் கட்டியிருந்த மார்க்சிஸ்ட் கட்சி யின் கொடியினை வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரி வியாழனன்று அவிழ்த்து சென்றுள்ளார். அப்பகுதி முழுவதும் மற்ற கட்சிக்கொடிகள் கட்டப்பட்டுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கொடியை மட்டும் வேண்டுமென்றே எடுத்துக் கொண்டு செல்லமுயன்ற தேர்தல் அதிகாரியின் வாகனத்தை முற்று கையிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.வி சிங்காரவேலன், ப.மாரியப்பன், ஒன்றிய செயலாளர் அசோகன், வேட்பாளர் கரிகாலன், ஒன்றியக்குழு உறுப்பினர் நாகையா, மாதர் சங்க மாநில துணைத்தலைவர் ஜி.கலைச் செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து மார்க்சி ஸ்ட் கொடியை கொடுத்து சென்றதை யடுத்து போராட்டத்தை விலக்கிக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.