districts

திருச்சி முக்கிய செய்திகள்

ஜூன் 9 மதுரையில்  ‘தமிழ் ஹைக்கூ’ உலக மாநாடு 

மதுரை, ஜூன் 7- மதுரையில் ஜூன் 9 அன்று தமிழ் ஹைக்கூ 3 ஆவது  உலக மாநாடு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாநாட்டின் ஆலோசகர் கவிஞர் மு. முரு கேஷ், ஒருங்கிணைப்பாளர் இனிய நந்தவனம் இத ழாசிரியர் கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன் ஆகியோர்  கூறுகையில், மாநாட்டை மதுரை உலகத் தமிழ்ச்சங்கம், தமிழ்ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம், இனிய நந்த வனம் மாத இதழ் ஆகியன இணைந்து நடத்துகின்றன.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் கவிக்கோ அரங்கில்  உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநரும், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநருமான அவ்வை ந.அருள் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். மூத்த இளைய கவி ஞர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். தூண்டில் ஹைக்கூ  இதழின் மாநாட்டுச் சிறப்பிதழும் வெளியிடப்படுகிறது.

மாநாட்டின் வரவேற்புக்குழுத்தலைவராக கலால்  துறை ஓய்வுபெற்ற அதிகாரி கவிஞர் சகா (எ) கஜேந்தி ரன், செயலாளராக கவிஞர் மூரா, பொருளாளராக வழக்கு ரைஞர் வெ.கிருஷ்ண வேணி உள்ளிட்ட 20 பேர் அடங்கிய  குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

முன்னாள் எம்எல்ஏவின்  தாயார் காலமானார்
சிபிஎம் அஞ்சலி

மதுரை, ஜூன் 7-  அதிமுக மருத்துவர் அணி மாநில இணைச்செயலா ளரும் திருப்பரங்குன்றம் தொகுதி முன்னாள் சட்டமன்ற  உறுப்பினருமான டாக்டர் பா.சரவணனின் தாயார் பா. அங்கம்மாள் (வயது 83) புதனன்று காலமானார்.

அன்னாரது மறைவுச் செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலா ளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன், பகுதிக்குழுச் செயலாளர் ஏ.பாலு, பகுதிக்குழு உறுப்பி னர்கள் பி.முத்து, கே.ஜாகீர் உசேன், கே.கணேசன், டான்யா ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று அவரது  உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சு.வெங்க டேசன் எம்.பி.,டாக்டர் சரவணனை செல்போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.

விசைத்தறி தொழிலாளி அடித்துக் கொலை: வாலிபர் கைது 

இராஜபாளையம், ஜூன் 7- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர்  சதீஷ்( 48.) .விசைத்தறி. தொழிலாளியான இவர் விருது நகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சங்கரபாண்டி யபுரத்தை அடுத்து உள்ள கிழவன் கோவில் கிராமத்தில்  அழகேந்திரன் என்பவரது வீட்டில் தனியாக வாடகைக்கு குடியிருந்து வந்தார். 

இவரது குடும்பத்தினர் கேரளாவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியில் புதிய  ராஜ் என்பவர் பக்கத்து வீட்டில் குடியிருந்து வருகிறார்.  புதிய ராஜியின் மனைவி மகாலட்சுமி குறித்து சதீஷ் அவ தூறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகா லட்சுமியின் மகன் அய்யப்பன் (20), சதீஷை கம்பால் சர மாரியாக தாக்கினார். இதில் தலையில் அடிபட்டு சதீஷ்  இறந்தார். இந்த கொலையை மறைக்க அய்யப்பன், சதீஷின் உடல் மீது பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து விட்டு அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தாக நாடகமாடினார். 

 சம்பவ இடத்திற்கு தெற்கு காவல் நிலைய ஆய்வா ளர் முரளிதரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சதீஷின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் கம்பால் தலையில் தாக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பக்கத்து  வீட்டில் குடியிருக்கும் அய்யப்பனை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் சதீஷை  கம்பால் தாக்கிக்கொன்றுவிட்டு, பூச்சி கொல்லி மருந்தை தெளித்து நாடகமாடியது தெரியவந்தது. அய்யப்பனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

ரயில்வே கேட் மீது மோதி விபத்து ஏற்படுத்திய 74 வாகனங்கள் பறிமுதல்

மதுரை, ஜூன் 7-  கடந்த 2023 ஆம் ஆண்டில் மதுரை ரயில்வே கோட்டப்  பகுதியில் உள்ள பூட்டிய ரயில்வே லெவல் கிராசிங் கேட்டுகளில் மோதி விபத்து ஏற்படுத்திய 74 வாகனங்கள்  பறிமுதல் செய்யப்பட்டன.

ரயில்களை விபத்து இல்லாமல் இயக்க சாலை கள் சந்திக்கும் இடங்களில் லெவல் கிராசிங் கேட்டுகள்  அமைக்கப்பட்டுள்ளன. ரயில் வரும்போது இந்த கேட்டு கள் இருபுறமும் பூட்டப்படும். இதன் மூலம் ரயில் மீது  வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தும் நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் கவ னக்குறைவாக வேகமாக வாகனங்களை இயக்குவோர் ரயில்வே கேட்டுகளில் மோதி இடித்து விபத்தை ஏற்படுத்து கின்றனர். 

மதுரை கோட்டத்தில் இது மாதிரி விபத்துகளில் சிக்கிய 74 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது  மாதிரியான குற்றச்செயல்களுக்கு ரயில்வே சட்டப்படி  5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் வாய்ப்பி ருக்கிறது. ரயில்வே கேட்டுகளில் பணியாற்றும் ரயில்வே  ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் ஆறு மாத சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். ரயில்வே கேட்டுகளுக்கு முன்பாக இருபுறமும் எச்சரிக்கை பலகைகள் மற்றும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் ரயில் பாதையை கடந்து விபத்தை தவிர்க்க வேண்டும் என கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வியாழன் (ஜூன் 6) உலக லெவல் கிராசிங் விழிப்புணர்வு நாள்  அனுசரிக்கப்பட்டது. மண்டல போக்குவரத்து அதிகாரி  அலுவலகம், பெட்ரோல் பங்குகள், பேருந்து நிறுத்தங்கள், சந்தை வளாகங்கள், லெவல் கிராசிங் கேட்டுகள்  ஆகிய இடங்களில் கூடும் சாலை வாகன உபயோகிப் பாளர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. 

முன்னதாக இதற்கான பிரச்சார வாகனத்தை கோட்ட  ரயில்வே மேலாளர் கொடியசைத்து பிரச்சாரத்தை துவக்கி  வைத்தார். விழிப்புணர்வு பிரச்சாரம் முதுநிலை கோட்ட  பாதுகாப்பு அதிகாரி மொகைதீன் பிச்சை தலைமையில் நடைபெற்றது.