திருவாரூர், ஜூலை 7 - தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவாரூர் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வி.தவமணி தலைமை வகித்தார். ஜூலை 10 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் கருப்பு தின ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை விளக்கி மாவட்டச் செயலாளர் ஏ.பிரேமா பேசினார். மாவட்ட, வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையனிடம், அமைப்பின் சார்பாக தீக்கதிர் ஆண்டு சந்தா வழங்கப்பட்டது. மாவட்டப் பொருளாளர் பி.மாலதி நன்றி கூறினார்.