districts

வேளாண் இணை இயக்குநர் ஆய்வு

தஞ்சாவூர், ஜூன் 29 -  

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், மாநில தென்னை நாற்றங்காலில் வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா தலைமையில் பண்ணைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.  

    வேளாண்மை துணை இயக்குனர் (மாநிலத் திட்டம்) வி.சுஜாதா, பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் எஸ்.மாலதி, விதை சான்று அலு வலர் சங்கீதா, தென்னை ஆராய்ச்சி நிலைய இணை  பேராசிரியர் தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தென்னை நாற்று பண்ணையை மேம்படுத்து வதற்காக, பலன் தராத தென்னை மரங்களை அகற்ற  வேண்டும். நல்ல தரமான தென்னை நெற்றுகளை  தேர்வு செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டு மென கூட்டத்தில்பேசிய, வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்து ராஜா அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து, பட்டுக்கோட்டை தாலுகா, முதல்சேரி கிராமத்தில், விதை உற்பத்தி செய்யும் விதைப் பண்ணை விவசாயி மணிகண்டன் வயலை ஆய்வு  செய்த இணை இயக்குநர், “ஆடுதுறை 53 ரகத்தில் கலவன்கள் இல்லாமல் நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்து வழங்க வேண்டுமென” அறிவுறுத்தி னார்.

   பின்னர், பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரும், அதிராம்பட்டினம் வேளா ண்மை விரிவாக்க மையத்தை பார்வையிட்டு, குறுவை தொகுப்புத் திட்ட விதைகள் மற்றும் இடு பொருட்களை அதிகளவில் இருப்பு வைத்து விவசாயி களுக்கு வழங்கவேண்டுமென அறிவுறுத்தினார்.