திருச்சிராப்பள்ளி, மே 21-
திருச்சிராப்பள்ளியில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாண வர் சேர்க்கைக்கான கூட்டம் அலை மோதியது. திருச்சிராப்பள்ளியில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24 கல்வியாண்டுக்கான கலை மற்றும் அறிவியல் பாடங்களுக்கு விண்ணப் பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பல்வேறு கல்லூரிகள் 2019-20 மற்றும் 2020-21 இல் கல்வி கற்பிப்பதில் பெரும் சவால்களைச் சந்தித்தன.
2021-22 ஆம் ஆண்டில் தொற்றுநோயின் தாக்கம் பெருமள விற்கு இல்லை. இருப்பினும், 2022-23-ஆம் கல்வியாண்டில் கல்வி நிறுவ னங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி யுள்ளன. மாநில மற்றும் மத்திய பள்ளி களில் பிளஸ் 2 முடிவுகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், 2023-24- ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கையை விரைவில் முடிக்க கல் லூரிகள் வேகம் காட்டி வருகின்றன.
ஆதாரங்களின்படி, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதிக் கல்லூரி களில் இளங்கலை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. திருச்சிராப்பள்ளியில் உள்ள பெரும்பா லான கல்லூரிகளில் கடந்த ஆண்டு களை விட இந்தாண்டு வந்துள்ள விண் ணப்பங்களின் எண்ணிக்கை அதிகம் எனக் கூறப்படுகிறது.
“இந்த ஆண்டு கலை அறிவி யல் கல்லூரிகளுக்கு பெரும் வரவேற் புள்ளது. சுமார் 2,000 இளங்கலை இடங்களுக்கு 20,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. மாண வர்களை சேர்ப்பதில் நாங்கள் கடுமை யான விதிமுறைகளைப் பின்பற்று கிறோம் ”என்கிறார் திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை எம். ஆரோக்கியசாமி சேவியர். மகளிர் கல்லூரிகளும் இதே நிலை யில் தான் உள்ளன. “இந்த ஆண்டு இளங்கலை படிப்புகளுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது ஆச்சரியமாக இருக்கிறது.
பெரும்பாலான இளங்கலை படிப்புகளுக்கான சேர்க்கை முடிந்து விட்டது’’ என்கிறார ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி கே.சந்திரசேகர். மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற தொழில்முறை படிப்புகளுக்கு பெற்றோர்களில் ஒரு பகுதியினர் போட்டியிட்டாலும், கலை மற்றும் அறி வியல் கல்லூரிகளில் வழக்கமான இளங்கலை படிப்புகளை எடுத்து படிக்க விரும்புகள் உள்ளார்கள் என கல்வி யாளர்கள் கருதுகின்றனர்.
இளங்கலைப் படிப்புகளில், பிஎஸ்சி கணினி அறி வியல், கணினி பயன்பாடுகள், சாப்ட் வேர் அப்ளிகேஷன்ஸ் படிப்புகள் முத லிடத்தில் உள்ளன, அதைத் தொடர்ந்து பி.காம். படிப்பிற்கு விண்ணப்பிப்போர் அதிகரித்துள்ளனர். சில கல்லூரிகள், கணினி அறிவியல் பிரிவில் இடங்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளன. தரவு அறிவியல், செயற்கை நுண் ணறிவு மற்றும் லைஃப் சயின்ஸ் படிப்புகளில் சேர்வதற்கும் மாணவர் கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த ஆண்டு இளங்கலை படிப்பில் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் படிப்பு களை அறிமுகப்படுத்த பல கல்லூரி கள் நடவடிக்கை எடுத்துள்ளன. ஆனால், மொழி மற்றும் அடிப்படை அறிவியல் படிப்புகளான பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம், பி.எஸ்சி இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களுக் கான வரவேற்பு குறைந்துள்ளது என் கின்றனர் கல்வியாளர்கள். அறிவியல் பட்டதாரிகளுக்கு மிகப்பெரிய வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கூறிய அருட்தந்தை ஆரோக்கியசாமி சேவியர் பெரும்பா லான பெற்றோர்கள் தங்கள் பிள்ளை கள் கணினி பயன்பாடு தொடர்பான படிப்புகளைப் படிக்க விரும்புகிறார் கள் என்றார்.