புதுக்கோட்டை, மே 18-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் வேலை அட்டை வழங்கக் கோரி விவசாயத் தொழிலா ளர்கள் புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலத்தில் வியாழக்கிழமையன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடி தாலுகா குள மங்கலம் வடக்கு ஊராட்சி யில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணி யாளர்களின் வேலை அட்டை புதுப்பிக்கப்பட்டு, பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், 60 பேர் பட்டிய லில் இடம் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. பட்டி யலில் இருந்து விடுபட்ட தைக் கண்டித்தும், விடு பட்டோரையும் மீண்டும் இணைக்க வலியுறுத்தியும் குளமங்கலம் வடக்கு ஊராட்சிமன்ற அலுவலகம் அருகே விவசாயத் தொழி லாளர்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். பின்னர், ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் கீரமங்கலம் போலீ சார் பேச்சுவார்த்தை நடத்தி யதை அடுத்து போராட்டத் தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.