அறந்தாங்கி, ஜூலை 16 -
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ரோஜா நகைக் கடை உரிமையாளர் ராஜசேகரை திருச்சி கே.கே.நகர் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் சித்ரவதைப்படுத்தி, மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதனால், ராஜசேகர் மனமுடைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொ லைக்கு தூண்டிய திருச்சி கே.கே.நகர் காவல் நிலைய அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிஐடியு மணமேல்குடி ஒன்றி யம் சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பேருந்து நிலையம் அருகே பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆபரண தொழிற்சங்க தலைவர் என்.மனோ கரன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் ஸ்ரீதர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கரு.இராம நாதன் ஆகியோர் உரையாற்றினர்.