மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள திருவிளையாட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பயனாளிகளுக்கு தங்க நகைகளை வழங்கும் நிகழ்ச்சி கூட்டுறவு சங்க செயலர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டுறவு சங்க தலைவர், இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.