districts

திருச்சி முக்கிய செய்திகள்

பொது சிவில் சட்டம் என்ற பெயரில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயல்படுவதா?

அசாம் முதல்வருக்கு ஜவாஹிருல்லா கண்டனம்

பாபநாசம், பிப்.25- முஸ்லிம் திருமணம் மற்றும் விவா கரத்துச் சட்டத்தை நீக்குவதாக அறி வித்த அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா  பிஸ்வாஷர்மாவுக்கு மனிதநேய மக்கள்  கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா கண்ட னம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று தினமும் அசாம் மக்கள் மனதில் பதற்றத்தை உருவாக்கி வரு கிறார் அம்மாநில பாஜக முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஷர்மா.  அவரது தலைமையிலான அமைச் சரவைக் கூட்டத்தில், முஸ்லிம் மக்க ளைக் குறிவைத்து, 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் கொண்டு வரப்பட்ட  முஸ்லிம் திருமணம் மற்றும் விவா கரத்துச் சட்டம் 1935-ஐ நீக்குவதாக அறி வித்துள்ளது வன்மையாக கண்டிக்கத் தக்கது.  அசாம் முஸ்லிம் திருமணம் மற்றும்  விவாகரத்துச் சட்டம், காலங்காலமாக முஸ்லிம் மக்களின் திருமணங்கள் மற்றும் விவாகரத்தை அங்கீகரித்து வந்தது. இந்தச் சட்டத்தின்படி, நிய மிக்கப்படும் பதிவாளர், திருமணம் மற்றும் விவாகரத்து உள்ளிட்ட தகவல் களைப் பதிவுசெய்து நிர்வகித்து வரு வார்.  தற்போது, அசாம் பாஜக அரசின் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, அத்தகைய 94 பதிவாளர்களின் பதி வேட்டை கையகப்படுத்த உத்தர விட்டிருப்பது, முஸ்லிம் மக்களை வஞ்சிக் கும் செயலாகும். மேலும், அத்தகைய  பதிவாளர்களின் பதவியை முற்றிலும் ஒழிக்கவும், இழப்பீடாக ரூ.2 லட்சம்  அவர்களின் மறுவாழ்வுக்கு வழங்கப் படும் என்றும் அறிவித்துள்ளது.  அசாமில் இனி முஸ்லிம்கள் தமது திருமணத்தை சிறப்புத் திருமணச் சட்டத்தின் அடிப்படையிலேயே பதிவு  செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. ‘பொது சிவில் சட்டத்தை நிறை வேற்றுவோம்’ என்ற நோக்கத்தில், இந்தியாவின் கவனத்தை தன்பால் ஈர்க்க, அசாம் முதல்வர் பிஸ்வா தின மும் புதிய நாடகத்தை அரங்கேற்றி வரு கிறார். முஸ்லிம் திருமணம் மற்றும்  விவாகரத்துச் சட்டத்தை வைத்து பெரும் பான்மை மக்கள் மத்தியில்,வெறுப்பு உணர்வை விதைக்கும் இந்தச் செயல், இந்திய அரசியலமைப்புச் சட்டத் திற்கு எதிரானதாகும். இந்தப் பாசிச நட வடிக்கையை வன்மையாகக் கண்டிக் கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடம்பன்குடியில் நேரடி நெல்  கொள்முதல் நிலையம் திறப்பு

தஞ்சாவூர், பிப்.25- தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே கடம்பன்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.  பூதலூர் ஒன்றியம் கடம்பன்குடி மற்றும் மாறனேரி, சோழகம்பட்டி, இந்தலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி யில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப் பட்டு தற்போது அறுவடை முடிந்துள்ளது. இப்பகுதியில் அறு வடை செய்யப்பட்ட நெல்மணிகள், விற்பனைக்காக நெல்  கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.  ஆனால் கடம்பன்குடியில் நேரடி நெல்கொள்முதல் நிலை யம் திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளா கினர். கடந்தாண்டு நெல் கொள்முதல் நிலையம் திறந்து செயல்பட்ட நிலையில், நடப்பாண்டும் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட் டத்திற்கு தயாராகினர்.  இதுகுறித்து தகவலறிந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக உயர் அலுவலர்களுக்கு தெரிவித்தார். அதனடிப்படை யில் ஞாயிற்றுக்கிழமை காலை நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.  ஊராட்சி மன்றத் தலைவர் சி.எம்.அசோக்குமார் முன்னி லையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.ரமேஷ், ஆர்.உதயகுமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப் பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தெருமுனை கூட்டம்

அறந்தாங்கி, பிப்.25- வரதட்சணை ஒழிப்பு மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிரான மாபெரும் தெருமுனை கூட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறந்தாங்கி கிளை சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பஞ்சாத்தி சாலையில் நடைபெற்றது. கூட்டத் திற்கு மாவட்டத் தலைவர் சித்திக்  ரகுமான் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் சிறப்புரையாற்றினார். இதில்  இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். உத்தர காண்ட் வன்முறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மாவட்டச் செய லாளர் முகமது மீரான் நன்றி கூறி னார்.

தஞ்சையிலிருந்து பள்ளியக்கிரஹாரம் வழியாக
திருக்கருக்காவூருக்கு மீண்டும் பேருந்து இயக்கப்படுமா?

பாபநாசம், பிப்.25 - தஞ்சாவூரிலிருந்து பள்ளியக்கிரஹாரம் வழியாக திருக்கருக்காவூருக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தஞ்சாவூரிலிருந்து பள்ளியக்கிரஹாரம், குலமங்களம், கூடலூர், குருங்களூர், உதார மங்கலம், களஞ்சேரி வழியாக திருக்கருக் காவூருக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும். ஏற்கனவே 1980-களில் நாள்தோ றும் 5 முறை சென்று வந்த அரசுப் பேருந்து,  1984-க்குப் பின்னர் நிறுத்தப்பட்டு விட்டது. இங்கு மீண்டும் அரசுப் பேருந்து இயக்கப்படு மானால், 8 ஊராட்சிகளைச் சேர்ந்த 20 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுவர்.  தற்போது மேற்படி கிராமங்களில் பேருந்து வந்து சென்றதன் நினைவாக, பயணி யர் நிழற்குடைகள் மட்டுமே உள்ளன என்பது  குறிப்பிடத்தக்கது.

வெடி விபத்தில்  ஒருவர் பலி

சாத்தூர், பிப்.25- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள  சிந்தப்பள்ளி கிராமத்தில்  தனியாருக்கு சொந்தமான ரவீந்திரா பட்டாசு ஆலை  இயங்கி வருகிறது. இந்த  பட்டாசு ஆலையிலுள்ள ஒரு  அறையில் தொழிலாளர் அஜித் குமார் என்பவர் மருந்து கலவை செய்யும்  பணியில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது எதிர்பாராத  விதமாக, திடீரென வெடி  விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு அறை முற்றிலும் தரை மட்டமாகியது. மேலும் கட்டிட ஈடுபாட்டில் சிக்கி அஜித் குமார் உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறை யினர் அஜித் குமார் உடலை  மீட்டனர்.  இதுகுறித்து சாத்தூர் காவல்துறையினர் வழக்குப்  பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னையைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

 அரியலூர், பிப்.25- அரியலூர் - திருமானூர் கொள்ளிடம் ஆற்று தண்ணீரில் மூழ்கிய மூன்று இளைஞர்களைத் தேடும் பணியில் அரியலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டனர். அவர்களில் இருவரை சடலமாக மீட்டனர். ஒருவரை தேடும் பணி ஞாயிறு ஐந்து மணிக்குப் பின்னரும் தொடர்ந்தது சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், ஒரு வேன் மற்றும் ஒரு காரில் தஞ்சாவூருக்கு சனிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்துள்ளனர்.   நிகழ்ச்சி முடிந்து சென்னை திரும்பும் போது அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில்  தண்ணீர் கொஞ்சமாக செல்வதைப் பார்த்த  வேனில் வந்த இளைஞர்கள் ஒன்பது பேர் ஆற்றில் குளித்துள்ளனர். அரை மணி நேரத்துக்கும் மேலாக குளித்த இளைஞர்களில் ஆறு பேர் கரை திரும்பிய நிலையில் பச்சையப்பன்(15) உட்பட  மூன்று இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கினர். இது தொடர்பாக உடன் குளித்த இளைஞர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு திருமானூர் காவல்துறையினர் மற்றும் அரியலூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர்  நீரில் மூழ்கியவர்களில் இருவரை சடலமாக மீட்டனர். சடலமாக மீட்கப்பட்ட பச்சையப்பன் மற்றும் எம்.சந்தானகிருஷ்ணன் (12)சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர்கள் ஆவர்.     தஞ்சாவூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த எம்.தீபக் (21) என்பவரை தேடும் பணி ஞாயிறு மாலை ஐந்து மணி வரை நீடித்தது.

நீரில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி

நீரில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி கடமலைக்குண்டு, பிப்.25- தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் தங்கபாண்டி (18). இவர் உசிலம்பட்டியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு  பி.எஸ்.சி. படித்து வந்தார்.  விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். உப்புத் துரை பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு உணவு தயாரிக்கும் பணிக்காக தங்கபாண்டி தனது நண்பர் களுடன் சென்றார். வேலை முடிந்ததும் அனைவரும் யானை கஜம் பகுதிக்கு குளிக்க சென்றனர்.  அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் மூழ்கிய தங்கபாண்டி உதவி கேட்டு அலறினார். அவரை நண் பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில்  தங்கப்பாண்டி நீரில் மூழ்கி பலியானார்.  தகவலறிந்த கடமலைக்குண்டு போலீசார் மற்றும் மயி லாடும்பாறை தீயணைப்புத் துறையினர் யானைக்கஜத்திற்கு  வந்து 6 மணி நேரம் போராடி நீருக்கு அடியில் பாறை இடுக்கு களுக்கு சிக்கி இருந்த தங்கபாண்டியின் உடலை மீட்டனர்.  இந்த யானைகஜம் பகுதியில் வருடத்திற்கு சராசரியாக 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக  வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு நீர்வீழ்ச்சியின் ஆழமான பகுதி, பாறை இடுக்குகள் தெரிவதில்லை. இத னால் தொடர்ந்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எனவே, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்வீழ்ச்சியில் பாதுகாப்பை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கிறிஸ்துவர் அரசியல் எழுச்சி மாநாடு: சு.வெங்கடேசன் எம்.பி. பங்கேற்பு

கிறிஸ்துவர் அரசியல் எழுச்சி மாநாடு: சு.வெங்கடேசன் எம்.பி. பங்கேற்பு திண்டுக்கல், பிப்.25- திண்டுக்கல்லில் கிறிஸ்துவர் அரசியல் எழுச்சி மாநாடு  சனிக்கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.  இந்நிகழ்வில், திண்டுக்கல் மறை மாவட்ட கத்தோ லிக்க சங்க மாவட்ட தலைவரும் தேசிய துணைச் செயலரு மான வழக்கறிஞர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். முத்தழகுபட்டி கிளை சங்கத்தின் தலைவர் அற்புதமணி அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். மறைமாவட்ட துணைத்தலைவர் லியோனிதாஸ்,   திண்டுக்கல் மறைமாவட்டப் பொருளாளர் சாம்சன்,  முதன் மைக்குரு சகாயராஜ், கொடைக்கானல் பால் மைக்கேல்  கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் விக்டர், பொதுநிலையினர் உருவாக்க மையத்தின் இயக்குநர் பூபதி லூர்து சாமி,   தமிழ்நாடு கத்தோலிக்க சங்கத்தின் மாநிலத்தலைவர் டேவிட் மான் சிங் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.  மாநாட்டில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் பேசுகையில், ‘‘அழிவு சக்திகள் வெல்ல கூடாது. என்பதில் நாம் முழு கவனம் செலுத்த வேண்டும்’’. என்றார்.  தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் வீடியோ வாழ்த்து செய்தி  ஒளிபரப்பப்பட்டது. மறைமாவட்ட செயல் தலைவர் ஸ்டீபன் மனோகர் தீர்மானங்களை வாசித்தார். செயல் தலைவர் நிக்கோலஸ் நிகழ்வுகளை ஒருங்கிணைத்த திண்டுக்கல் மறை மாவட்டத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டனர்.

நத்தம் மாரியம்மன் கோவிலில்  நாளை பூக்குழி திருவிழா

நத்தம், பிப்.25- திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோவி லில் நடைபெறும் திரு விழாக்களில் மாசி பெருந்திருவிழா தனி பெருமை படைத்ததாகும். இந்த விழா பிப்ரவரி 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  ஞாயிறன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து  வந்து அம்மனுக்கு பாலா பிஷேகம் நடைபெற்றது. திங்களன்று பக்தர்கள் அம்ம னுக்கு மஞ்சள் திருப்பா வாடை கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு, காவடி  வகையறாக்கள் எடுத்து வரப்படும்.  இதையடுத்து செவ்வா யன்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் விழா வையொட்டி காலையில் கழுகு மரம் ஊண்றப்படும். பின்னர் மாலையில் கழுகு மரம் ஏறிய பிறகு விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பூக் குழியில் வரிசையாக இறங் குவார்கள். அன்றிரவு கம்பம்  அம்மன் குளத்தில் கொண்டு போய் சேர்க்கப்படும்.  மறுநாள் புதன்கிழமை காலையில் அம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியை தொ டர்ந்து அன்றிரவு அலங்கரிக் கப்பட்ட வண்ண பூப்பல்லக் கில் மாரியம்மன் எழுந்தருளி நகர்வலம் வரும். தொ டர்ந்து அங்குள்ள மண்டகப் படிகளில் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்து கோவிலுக்கு சென்று அம்மன்  இருப்பிடம் சேரும்.  பொது சுகாதாரம், குடிநீர்  வசதிகளை நத்தம் பேரூ ராட்சித் தலைவர் சேக்  சிக்கந்தர் பாட்சா மேற் பார்வையில் செயல் அலு வலர் சின்னச்சாமி, துப்பு ரவு ஆய்வாளர் செல்வி சித்ராமேரி உள்ளிட்ட பேரூ ராட்சி பணியாளர்கள் செய்து  வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் மேற்பார்வை யில் காவல்துறையினர் செய்து வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை  தமிழ்நாடு இந்துசமய அற நிலைய துறை அதிகாரிகள், கோவில் பூசாரிகள், விழாக் குழுவினர்கள் செய்திருந்த னர்.

ஆதரவற்றோருக்கு  உணவு  வழங்கல்

சின்னாளப்பட்டி, பிப்.25- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஈடன் கார்டன் லயன்ஸ் கிளப் சார்பில் பசிப்பிணி போக்கும் திட்டத்தில் தெருவோர ஆதரவற்றோருக்கு உணவு  பொட்டலம் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கு லயன்ஸ் கிளப் தலைவர் வினோத் தலைமை வகித்தார். சேவை த்திட்ட தலைவர் ஆண்டவர் ஆதரவற்றோருக்கு உணவு பொட்டலம் வழங்கினார்.

புரோட்டா சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமையில் அனுமதி

கரூர், பிப்.25- கரூர் மாவட்டம் ராயனூரில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் விடுதியில் புரோட்டா சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்கள் குமட்டல் அறிகுறியை கண்டுள்ளனர். சிலர் வாந்தி, தலைவலி, வயிற்றுப் போக்கல் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  முதலுதவிக்குப் பின், அவர்களில் சிலர் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த சுகாதாரத்துறையினர் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

கடலில் தவறி விழுந்த கீச்சாங்குப்பம் மீனவர் மாயம்

கடலில் தவறி விழுந்த கீச்சாங்குப்பம் மீனவர் மாயம் நாகப்பட்டினம். பிப்.25- நாகப்பட்டினம் மாவட்டம், கீச்சாங்குப்பம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர்,  ஞாயிறன்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து மாயமானார்.  கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த 13  மீனவர்கள் சனிக்கிழமை இரவு நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இயந்திரப் படகில் கடலுக்குச் சென்றுள்ளனர். கடற்கரையில் இருந்து சுமார் ஐந்து கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, டி.ரெத்தினசாமி (35) என்ற மீனவர் கடலில் தவறி விழுந்தார். அவரைக் கண்டுபிடிக்க சக மீனவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. மாயமான மீனவரை தேடும் பணியில் கடலோர காவல்படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் ஈடுபட்டனர்.

கிறிஸ்துவர் அரசியல் எழுச்சி மாநாடு: சு.வெங்கடேசன் எம்.பி. பங்கேற்பு

கிறிஸ்துவர் அரசியல் எழுச்சி மாநாடு: சு.வெங்கடேசன் எம்.பி. பங்கேற்பு திண்டுக்கல், பிப்.25- திண்டுக்கல்லில் கிறிஸ்துவர் அரசியல் எழுச்சி மாநாடு  சனிக்கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.  இந்நிகழ்வில், திண்டுக்கல் மறை மாவட்ட கத்தோ லிக்க சங்க மாவட்ட தலைவரும் தேசிய துணைச் செயலரு மான வழக்கறிஞர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். முத்தழகுபட்டி கிளை சங்கத்தின் தலைவர் அற்புதமணி அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். மறைமாவட்ட துணைத்தலைவர் லியோனிதாஸ்,   திண்டுக்கல் மறைமாவட்டப் பொருளாளர் சாம்சன்,  முதன் மைக்குரு சகாயராஜ், கொடைக்கானல் பால் மைக்கேல்  கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் விக்டர், பொதுநிலையினர் உருவாக்க மையத்தின் இயக்குநர் பூபதி லூர்து சாமி,   தமிழ்நாடு கத்தோலிக்க சங்கத்தின் மாநிலத்தலைவர் டேவிட் மான் சிங் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.  மாநாட்டில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் பேசுகையில், ‘‘அழிவு சக்திகள் வெல்ல கூடாது. என்பதில் நாம் முழு கவனம் செலுத்த வேண்டும்’’. என்றார்.  தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் வீடியோ வாழ்த்து செய்தி  ஒளிபரப்பப்பட்டது. மறைமாவட்ட செயல் தலைவர் ஸ்டீபன் மனோகர் தீர்மானங்களை வாசித்தார். செயல் தலைவர் நிக்கோலஸ் நிகழ்வுகளை ஒருங்கிணைத்த திண்டுக்கல் மறை மாவட்டத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டனர்.