districts

பொன்னமராவதியில் ஜமாபந்தி

பொன்னமராவதி, ஜூன் 17-

    பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் பசலி-1432 ஜமாபந்தி ஜூன் 15 ஆம் தேதி ஜமாபந்தி அலுவலர் புதுக் கோட்டை டிஆர்ஓ செல்வி தலைமையில் தொடங்கியது.

    முதல்நாள் காரையூர் பிர்காவில் உள்ள ஒலியமங்கலம், மறவா மதுரை, இடையாத்தூர், காரையூர், மேலத்தானியம், அம்மன்குறிச்சி ஆகிய உள்வட்ட பகுதியில் உள்ள பொதுமக்களிடமிருந்து 47 கோரிக்கை  மனுக்கள் பெற்ற பின்னர் வருவாய் கணக்குகளை ஆய்வு செய்தார்.  இதனை தொடர்ந்து வெள்ளியன்று காரையூர் பிர்க்காவில் உள்ள அரச மலை, நெரிஞ்சிக்குடி, மூலங்குடி, நல்லூர், மேலநிலை, செவலூர், வாழைக்குறிச்சி உள்ளிட்ட உள்வட்ட கிராம பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 55 மனுக்கள் பெறப்பட்டன.  

   முன்னதாக தாலுகா அலுவலகம் முன்பு போடப்பட்டிருந்த அளவை  செயின் அளவீடு முறைகள் குறித்து சர்வேயர்கள், கிராம நிர்வாக அலு வலர்களிடம் விளக்கம் கேட்டார். இதில் வட்டாட்சியர் பிரகாஷ், டிஆர்ஓ நேர்முக உதவியாளர் கண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சி யர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜூன் 20 அன்று பொன்னமராவதி பிர்க்கா மற்றும் அன்று மாலை வட்டாட்சியர் அலுவ லகத்தில் குடிகள் மாநாடு நடைபெறுகிறது.