மதுரை, ஜன.25- மதுரை மாவட்டம் அலங்கா நல்லூர் அருகே கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவு தல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 24 அன்று திறந்துவைத்து, முதல் ஜல்லிக் கட்டைதுவக்கி வைத்தார். இதில் 478 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்ற னர். 5 சுற்றுகளில் தேர்வு செய் யப்பட்ட சிறந்த மாடுபிடி வீரர்கள் 6ஆவதாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு களம் கண்டனர். இதில் சிவகங்கை மாவட்டம் பூவந்தி பகுதியை சேர்ந்த அபி சித்தர் என்ற மாடுபிடி வீரர் 10 காளை களை அடக்கி முதல் பரிசை பெற் றார். அவருக்கு முதல் பரிசாக மகேந்திரா (தார்) கார் மற்றும் அரசு சார்பில் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரருக்கான 2ஆம் பரிசாக சின்னப்பட்டி தமி ழரசன், விளாங்குடி பரத்குமார் ஆகிய இருவரும் 6காளைகளை அடக்கிய நிலையில் தலா 75 ஆயி ரம் ரூபாய்க்கான காசோலை களும், பைக் இருவருக்கும் பகிர்ந்த ளிக்கப்பட்டது. 3ஆம் பரிசு மணிகண்டன் என்ற மாடுபிடி வீரருக்கு 50ஆயிரத்துக் கான காசோலை வழங்கப்பட்டது. சிறந்த காளையாக முதல் பரிசை வென்ற புதுக்கோட்டை மங்க தேவன்பட்டி கணேஷ் கருப்பையா என்பவரது காளைக்கு ஒரு (தார்) கார் ஜீப் மற்றும் 1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது. இரண்டாமிடம் வென்ற திருச்சி அணைக்கரை வினோத் காளை என்பவருக்கு பைக் மற்றும் 75 ஆயி ரத்திற்கான காசோலை வழங்கப் பட்டது. மூன்றாமிடம் வென்ற மதுரை அண்ணாநகர் பிரேம் ஜெட்லி என்ப வரது காளைக்கு 50 ஆயிரத்திற் கான காசோலை வழங்கப்பட்டது மேலும் போட்டியின்போது சிறப்பாக களம்காணும் மாடுபிடி வீரர்களுக்கும், காளையின் உரி மையாளர்களுக்கும் தங்கம் மோதி ரம், தங்க நாணயங்கள் முதல் சைக் கிள் உள்ளிட்ட ஏராளமான பரிசு களும் வழங்கப்பட்டது.காளை உரி மையாளர்கள், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.