ஆந்திர மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு
விஜயவாடா, நவ.4- ஆந்திராவில் விரிவான ஜாதி அடிப்படை யிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான திட்டத்திற்கு ஆந்திரப் பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளது. தலைமைச் செயலகத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட் டத்துக்குத் தலைமை வகித்த முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டி, சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒடுக்கப்பட்ட வகுப்பி னரின் வாழ்வு மேம்படவும், அவர் களின் சமூக அதிகாரத்தை அடுத்த கட்டத் திற்கு கொண்டு செல்லவும் உதவியாக இருக்கும் என்றார். மேலும் அவர் கூறுகையில், “சமூ கம், பொருளாதாரம், கல்வி சார்ந்த வேலை வாய்ப்பு, போன்ற பிரச்சனைகளின் அடிப்ப டையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். இந்தக் கணக்கெடுப்பு, நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான வரம்பைத் தாண்டியுள்ள மக்களை மதிப்பிட உதவும். வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்தல் மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவற்றிக்கு கணக்கெடுப்புத் தரவு பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.
காசாவில் பள்ளி மீது குண்டுவீசி இஸ்ரேல் கொடூரத் தாக்குதல் 15 பேர் உயிரிழப்பு; 54 பேர் காயம்
டெல் அவிவ், நவ.4- காசாவில் அல்-பகூரா என்ற பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்திய தில் 15 பேர் உயிரிழந்ததாகவும், 54 பேர் காயமடைந்ததாகவும் தக வல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி, காசாவில் உள்ள பள்ளிகள், தங்குமிடங்கள், மருத்துவம னைப் பகுதிகள் மற்றும் ஆம்பு லன்ஸ்களை குறிவைத்து இஸ் ரேல் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இத னால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கையில் சரிபாதிக்கும் அதிகமாக குழந் தைகள், பெண்களே உள்ளனர். காசா நகரில் வெள்ளிக் கிழமை ஆம்புலன்ஸ் வாகனத் தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக் குதலில் குறைந்தது 15 பேர் கொல் லப்பட்டதாக சுகாதார அதிகாரி கள் தெரிவித்தனர். இந்நிலையில், இஸ்ரேல் ராணு வம் அல்-பகூரா (al-Fakhoora School) என்ற பள்ளிக்கூடம் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்திய தில் 15 பேர் கொல்லப்பட்டதாக வும், 54 பேர் காயமடைந்ததாக வும் தகவல்கள் வெளியாகியுள் ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்கு தலில் குறைந்தது 231 பேர் உயிரி ழந்திருக்கின்றனர் என்று காசா வின் செய்தித் தொடர்பாளர் அஷ் ரப் அல்-குத்ரா செய்தியாளர்களி டம் தெரிவித்துள்ளார். “அக்டோபர் 7 முதல் 150 துணை மருத்துவர்கள் (para medics) கொல்லப்பட்டுள்ளனர். 27 ஆம்புலன்ஸ் வாகனங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள் ளன. பலியானவர்களில் பெரும் பாலானவர்கள் பள்ளிக்கூடத்தில் அமர்ந்திருந்த பெண்கள், குழந் தைகள் எனத் தெரிகிறது. அவர் களின் எலும்புகள் மற்றும் சதை கள் பிளாஸ்டிக் பைகளில் சேக ரிக்கப்பட்டன” என்றும் அவர் வேத னையை பகிர்ந்து கொண்டுள்ளார்.
மின்கம்பி அறுந்து விழுந்து 4 மாடுகள் பலி
புதுக்கோட்டை, நவ.4 - புதுக்கோட்டை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை ப ரவலாக மழை பெய்தது. அப்போது, சுமார் 5 மணியள வில் கவிநாடு மேற்கு வட்டம் அத்திரிப்பட்டி பகுதி யில் வயல்வெளியில் மாடு கள் மேய்ந்து கொண்டிருந்தன. அந்த வழியே சென்ற மின்கம்பம் எதிர்பாராத வித மாக அறுந்து விழுந்ததில், வயலில் மேய்ந்து கொண்டி ருந்த செல்வராஜ், பழனியப் பன், மாரிமுத்து, சந்திரசேகர் ஆகியோரின் 4 பசு மாடு களும், ஒரு காளைக் கன்றும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மின்நிறுத்தம் செய் யப்பட்டது. ஒரே பகுதியில் 4 மாடுகள் உயிரிழந்த சம்ப வம் பெரும் சோகத்தை ஏற்ப டுத்தியது. திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஆன்லைனில் ஓட்டல் அறைகள் முன்பதிவு செய்வோருக்கு எச்சரிக்கை
திருச்சிராப்பள்ளி, நவ.4- போலி இணையதளங்கள் மூலம் ஆன்-லைனில் ஓட்டல் அறைகளை முன்பதிவு செய்து ஏமாற வேண்டாம் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சி மாநகருக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இவர்கள் வெளியூரில் இருந்து வருவதால், ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்ய இணைய தளத்தில் தேடுகிறார்கள். இவ்வாறு தேடும்போது, ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி கள் ஆகியவற்றில் அறைகளை முன்பதிவு செய்து தருவதாக போலியான இணையதளம் மூலம் சமூக வலைதளத்தில் விளம்பரங்கள் வருகின்றன. அதை நம்பி, சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஆன்-லைனில் முன்பதிவு செய்ய பணம் செலுத்து கிறார்கள். ஆனால் அவர்கள் பணம் பெற்றுக்கொண்டு அறை களை முன்பதிவு செய்து தராமல் ஏமாற்றுவதாக போலி இணையதளம் மீதான புகார்கள் சமீப காலமாக பதிவாகி வரு கின்றன. போலி இணையதளம் மூலம் ஆன்-லைனில் ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அறைகளை வாடகைக்கு முன்பதிவு செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதால், திருச்சி மாநகரத்தில் இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க வேண்டுமென காவல் ஆணையர் காமினி உத்தரவிட்டுள்ளார். மேலும், இது போன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக் கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். போலி விளம்பரங்களை நம்பி பக்தர்கள் மற்றும் பொது மக்கள் யாரும் பணம் அனுப்பி ஏமாற வேண்டாம். அத்துடன், இதுபோன்று மோசடியில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல் களை காவல்துறைக்கு தெரிவிக்கும்படியும், தகவல் தெரி விப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தீபாவளி: திருச்சியில் 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்
திருச்சிராப்பள்ளி, நவ.4 - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் 2 இடங்களில் தற்காலிக பேருந்த நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருச்சி மாநகரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், 2 இடங்க ளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்து களும், மன்னார்புரம் ரவுண்டானாவிலிருந்து இயக்கப்பட உள்ளன. அதுபோல் தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசு பேருந்துகள், மன்னார்புரம் வந்து பயணி களை இறக்கி-ஏற்றி மன்னார்புரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுப் பேருந்துகள் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சோனா, மீனா தியேட்டர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகிலிருந்து இயக்கப்படவுள்ளன. மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளின் வழித்தடங்களில் எந்தவித மாற்றமுமின்றி, வழக்கம்போல மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு சுற்றுப் பேருந்துகள் இயக்கவும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் 5 நாட்களில் இந்த தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளன. தீபாவளி பண்டிகை முடிந்து இரண்டு நாட்கள் வரை, இது நடை முறையில் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கத்தியைக் காட்டி பணம் பறித்தவருக்கு 7 ஆண்டு சிறை
புதுக்கோட்டை, நவ.4- கத்தியைக் காட்டி மிரட்டி பணம், கைப்பேசி பறித்த வருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை பொன்நகரைச் சேர்ந்தவர் சுகுமார் மகன் வசந்தகுமார். இவர் புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள கேஎல்கேஎஸ் நகர் பிரிவு சாலையில் கடந்த 2021 டிசம்பர் 11-ஆம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காந்திநகரைச் சேர்ந்த சின்னையா மகன் விஜயகுமார் (47), வசந்தகுமாரை வழி மறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாய் மற்றும் கைப்பேசியைப் பறித்துச் சென்றார். இதுகுறித்து வசந்தகுமார் புதுக்கோட்டை கணேஷ்நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விஜயகுமாரைக் கைது செய்தனர். இந்த வழக்கு முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சி.சசிகுமார், வியாழக் கிழமை தீர்ப்பளித்தார். விஜயகுமாருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தொழில் தொடங்க மானிய கடன்
புதுக்கோட்டை, நவ.4- புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மூலம் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கி கடனுதவி வழங்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரி வித்துள்ளதாவது: திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்ச மாக ரூ.75 லட்சம் தமிழக அரசு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீதம் மானியம் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகி தத்தில் 3 சதவீதம் மானியமாகவும் வழங்கப்படும். இத் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் எனில் 45 வயதுக்குள்ளும் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் எனில் 55 வயதுக் குள் இருக்கவேண்டும். எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் www.msme online.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களைப் பூர்த்தி செய்து, அதன் நகல் மற்றும் சான்றிதழ்களுடன் பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கம், புதுக்கோட்டை - 622005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஜெயங்கொண்டத்தில் நாட்டு வெடி குடோனுக்கு சீல்வைப்பு அதிமுக கவுன்சிலர் கைது
அரியலூர்,நவ.4- அரியலூர் மாவட்டம் வெற்றியூர் விரகாலூரில் அண்மையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்த னர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் முழுவதும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பட்டாசு ஆலை மற்றும் பட்டாசு கடைகளில் ஆய்வு செய்யபடும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா செங்குந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவர் செங்குந்தபுரம் .1-வது வார்டு அதிமுக கவுன்சில ராக உள்ளார். இவர் செங்குந்தபுரம் கிராமம் பேருந்து நிறுத்தத்தில் பட்டாசுக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் காவல் ஆய்வா ளர் ராமராஜன் தலைமையிலான போலீசார் இப்பகுதியில் சோதனையிட்டனர். அப்போது தங்கபாண்டியன் தனது கடைக்கு பக்கம் ரைஸ் மில் அருகே உள்ள ஒரு குடோ னில் 80 ஆயிரம் மதிப்புள்ள 25 மூட்டைகளில் 550 கிலோ எடையில் நாட்டுவெடி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.மேலும் அதே பகுதியில் மற்ற இரண்டு அறை களில் 315 பாக்ஸ்களில் ரூ.2 லட்சம் மதிப்பிலான வெடி பொருட்கள் இருந்தது. நாட்டு வெடி வைத்திருந்த குடோனுக்கும், அளவுக்கு அதிகமாக பட்டாசுகள் வைத்திருந்த மற்ற இரண்டு குடோன்கள் என மொத்தம் மூன்று குடோன்களுக்கும் ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) சுதாமதி, வருவாய் ஆய்வாளர் செல்வராஜ், உள்ளிட் டோர் சீல் வைத்தனர். மேலும் ஜெயங்கொண்டம் போலீ சார் தங்கப்பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்புடன் தீபாவளியை கொண்டாட செயல்முறை விளக்கம்
திருச்சிராப்பள்ளி, நவ.4- திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, மாவட்ட தீய ணைப்புத்துறை, மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி ராப்பள்ளி பட்டர்பிளை ஆகியவை இணைந்து பாதுகாப் புடன் கூடிய பட்டாசு வெடிக்கும் செயல்முறை விளக்க நிகழ்ச்சி ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் மத்தியில் தீ விபத்து ஏற்பட்டால் அதற்கான முதல் உதவி மற்றும் செயல்முறை விளக்கம் குறித்து மாவட்ட அலுவலர் அனுசுயா முன்னி லையில் செய்து காண்பித்தனர். மேலும் இவ்விழாவில் அரவிந்தன், டாக்டர் கே. ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் தீயணைப்பு துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு தீ விபத்தில் சிக்கியவர் களுக்கும் முதலுதவி செய்வது எப்படி என்பது குறித்து குறிப்பாக கண்களில் தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதல் உதவி குறித்தும் ஜோசப் கண் மருத்துவ மனையின் இயக்குனர் மரு.பிரதீபா விளக்கி கூறினார். இதில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் நர்சிங் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ரோட்டரி கிளப் பிரசிடெண்ட் ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபா பிரபு செய்திருந்தார்.
பள்ளிகளுக்கு வசதிகளை செய்து தருக! ஜவாஹிருல்லா எம்எல்ஏவிடம் கோரிக்கை
பாபநாசம். நவ.3- தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி, மாகாளிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி - கிழக்கு உள்ளிட்ட வற்றில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களி டம் உரையாடினார். ஆசிரியர்கள் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருமாறு எம்.எல்.ஏ விடம் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். சேதமடைந்த நிலையில் உள்ள அய்யம் பேட்டை கிளை நூலகத்திற்குச் சென்று பார்வையிட்டார். முன்னதாக, எம்.எல்.ஏ தொகுதி மேம் பாட்டு நிதியில் பாரதிதாசன் தெருவில் ரூ 15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டட கட்டுமானப் பணியை பார்வையிட்டார். இதில் அய்யம் பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜ சேகர், பேரூராட்சி தலைவி புனிதவதி, அய்யம் பேட்டை பேரூர் திமுக செயலர் வழக்கறிஞர் துளசி அய்யா, பேரூராட்சி துணைத் தலை வர் அழகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.