districts

img

மாணவிக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்கல்

பெரம்பலூர், ஏப்.29-  

    பெரம்பலூர் மாவட்டத் தில் ஆலத்தூர் வட்டம், காரை ஊராட்சிக்குட்பட்ட மலையப்பநகர் பகுதியில் 120 குடும்பங்களும், வேப்பந் தட்டை வட்டம், எறையூர்  பகுதியில் 110 குடும்பங் களும், குன்னம்வட்டம், நமையூர் நரிஓடை பகுதி யில் 20 குடும்பங்களும் என  சுமார் 250 குடும்பங்களுக் கும் மேல் வசித்து வருகின்ற னர்.  

   1989 ஆம்ஆண்டு 250-க்கும் மேற்பட்டபிரிவினரை உள்ளடக்கிய பி.சி வகுப் பில் இருந்து நரிக்குற வர்கள் உள்ளிட்ட சுமார் 100  பிரிவினரை எம்.பி.சி எனப் படும் மிகவும் பிற்படுத்தப்பட் டோர் பட்டியலில் சேர்த்து  அரசிதழில் வெளியிடப்பட் டது. ஆனால் நரிகுறவர் இன மக்கள் தங்களை பழங்குடி யினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

   இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற் கொண்ட நடவடிக்கையால், ஒன்றிய அரசு இதற் கான ஒப்புதலை அளித்தது.  இதனால், நரிக்குறவர் இன மக்கள் பழங்குடியினர் சான்றிதழ் பெறுவதற்கான  வாய்ப்பு உருவாக்கப்பட்டது.  

  இந்நிலையில், பெரம்ப லூர் மாவட்டம் ஆலத்தூர்  வட்டம், காரை ஊராட்சிக் குட்பட்ட மலையப்பநகர் பகுதியைச் சார்ந்த சுப்பிர மணியன் மகள் கோகிலா (19) என்ற மாணவிக்கு எம்.பி.சி. சான்றிதழிலிருந்து மாற்றி, எஸ்.டி நரிக்குறவர் என்கிற பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் வழங்கப் பட்டது.  

  இதனைத்தொடர்ந்து அந்தப்பகுதில் வசிக்கும் கல்லூரி மாணவ, மாணவி கள் மற்றும் வேலை நாடு நர்கள் என 15-க்கும் மேற்பட்ட  நரிக்குறவர் இனமக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.