districts

img

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா சாதனை

கோவில்பட்டி,செப்.17- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாலாட்டின்புத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் திரவ இயக்க திட்ட மையத்தின் இயக்குனர், முனைவர் வி.நாராயணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: சுதந்திரத்திற்கு பிறகு எல்லா துறைகளிலும் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது 2047 வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும். அதற்கு சந்திரயான் திட்டம் வெற்றி முதல் படி. சந்திரயான் 3 இந்தியர்களுக்கு கிடைத்த பெருமை. அங்குள்ள தாது பொருட்களை எடுத்து ஆய்வு செய்யக்கூடிய வகையில் சந்திரயான் 3 இல் ஏற்பாடு செய்யப்பட்டு அதுவும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது இந்தியா 1967ல் முதன் முதலில் சிறிய ராக்கெட் அனுப்பி விண்வெளி ஆராய்ச்சியை தொடங்கியது. கடந்த அறுபது ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் உள்ள எல்லா திட்டங்களும் இந்திய மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய திட்டங்கள்.நிலவில் தண்ணீர் உள்ளது என்பதை சந்திரயான் 1 கண்டு பிடித்தது. உலகில் முதன் முதலில் இ தை கண்டுபிடித்தது இந்தியா தான். ஒரே வாகனத்தில் 104 செயற்கை கோள்களைகொண்டு விண்வெளியில் சரியாக செலுத்திய நாடு இந்தியா .செவ்வாயில் ஆராய்ச்சி செய்ய மிக குறைந்த செலவில் ஒரே முறையில் வெற்றி பெற்ற நாடு இந்தியா. மற்ற நாடுகள் பலமுறை முயன்று தான் அதில் வெற்றி பெற்றன நிலவில் குடியிருக்க வாய்ப்பு இருப்பதாகத்தான் கருதுகிறேன். அதற்கு இன்னும் பல ஆய்வுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது அடுத்ததாக இந்தியா சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்வி ஒன்றை செலுத்தியுள்ளது. மேலும் விண்வெளிக்கு மனிதர்களை கொண்டும் சொல்லும் ஆய்வுகளும் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.