சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சிராப்பள்ளி, நவ.25 - திருச்சி விஷ்வாஸ்நகர், இ.பி.ரோடு மற்றும் காந்தி மார்க்கெட் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வேஸ்ட் பேப்பர் கடைகளில் 50-க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 ஆண்டுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்தி சம்பள உயர்வு வழங்கப்படும். இந்த ஆண்டிற் கான சம்பள உயர்வு பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்படவில்லை. இத னால் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 15 நாட்க ளாக வேலை வழங்காமல், வேறு தொழி லாளர்களை வைத்து வேலை செய்தனர். இதனை கண்டித்தும், சுமைப்பணி தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். சம்பள உயர்விற் கான பேச்சுவார்த்தையை உடனே துவங்கி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் சிஐடியு வேஸ்ட் பேப்பர் சுமைப்பணி தொழிலா ளர்கள் வேலை நிறுத்தம், முற்றுகை போராட்டம், கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் கடந்த 30.10.23 அன்று ஆர்.டி.ஓ தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடந்தது. இதில் கூலி உயர்வு பிரச்சனையை பிறகு பேசுவது, அது வரையில் தொழிலாளிகளுக்கு வேலை வழங்கி பழைய சம்பளம், கடந்த ஆண்டு வழங்கிய தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என முடிவானது. ஆனால் சில முதலாளிகள் தீபாவளிக்கு போனஸ் தரமறுத்தும், 20 ஆண்டு களாக வேலை செய்த தொழிலாளி களுக்கு மாற்றாக வேறு தொழிலாளி களை வைத்து வேலை செய்வதை கண்டித்தும், திருச்சி மாவட்ட சிஐடியு அனைத்து சுமைப்பணி தொழிலாளர் கள் சங்கம் சார்பில் சனிக்கிழமை இ.பி. ரோட்டில் உள்ள அண்ணாச்சி குடோன் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சுமைப் பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவ குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ், கிருஷ்ணமூர்த்தி, சிபிஎம் பகுதிச் செய லாளர் லெனின் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமான சுமைப்பணி தொழி லாளிகள் கலந்து கொண்டனர்.