districts

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தஞ்சாவூர், மே.7 -

    தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு (டி.டி.எட்)  தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களுடன், தேர்வர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக மே 9-ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.  

   இதுகுறித்து, தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செங்குட்டுவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,  

   மே 9-ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரை, தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், தேர்வர்கள் நேரில் வந்து  விண்ணப்பிக்கலாம். வெப் கேமரா வழியாக  புகைப்படம் எடுக்க வேண்டி இருப்பதால் விண்ணப்ப தாரர்கள் நேரடியாக வர வேண்டும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.  

  ஏற்கனவே தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றி தழ்கள்,  தேர்வுக் கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப் பிக்க தவறியவர்கள் மே.15, 16 ஆகிய தேதிகளில்,  சிறப்பு அனுமதிக்கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க லாம்” எனத் தெரிவித்துள்ளார்.