districts

img

நாகர்கோவில்: பிரபல நகைக்கடை மீது மோசடி புகார்

நாகர்கோவில், அக்.21- நாகர்கோவிலில் நகை முதலீட்டில் மோசடி புகார் தொடர்பாக பிரபல நகைகடையில் காவல்துறை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, கோவை, ஈரோடு,  தஞ்சாவூர், நாகர்கோவில் போன்ற 7  இடங்களில் பிரணவ் என்ற பிரபல நகைக்கடை இயங்கி வந்தது. இந்த நகைக் கடையின் கவர்ச்சிகர மான அறிவிப்பை நம்பி ஏராளமானோர் பணம் முதலீடு செய்தனர். ஆரம்பத் தில் வட்டி தொகை மாதந்தோறும் வழங்கப்பட்ட நிலையில் கடந்த 2 மாத மாக நகைக் கடை வழங்கிய காசோலை பணமில்லாமல் திரும்பியது. அதைத்தொடர்ந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட முதலீட்டாளர்கள் நாகர்கோவில் மற்றும் பல பகுதிகளில் உள்ள பிரணவ்  ஜுவல்லரி கடைகளை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கி டையில் அந்தக் கடை திடீரென மூடப் பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. சத்ய பிரபு பிரியா உத்தரவின் பேரில் நகை கடை யின் 11 கிளைகளிலும் வெள்ளியன்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. நாகர்கோவில் கிளையில் பொருளா தார குற்றப்பிரிவு துணை காவல் கண் காணிப்பாளர்  குமரேசன், ஆய்வா ளர் ஜெர்மின் லதா, துணை ஆய்வாளர் கள்   மேரி அனிதா, இசக்கித்தாய் மற்றும்  காவலர்கள் கடைக்கு சென்று ஊழி யர்களை ஒரு இடத்தில் அமர வைத்து  விட்டு, கடையில் உள்ள நகைகளை ஆய்வு செய்தனர். சனிக்கிழமை  2-வது  நாளாக பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் தங்கள் ஆய்வினை தொடர்ந்தனர். மேலும் பிரணவ் நகைக்கடையில் 50 செயின்கள் மற்றும் நெக்லஸ்கள், 100 மோதிரங்கள், 100 கம்மல்கள் என இருந்தன. இவை அனைத்தும் போலி நகைகள் என்பது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் தெரியவந்தது. இத னால் போலி நகையை விற்றார்களா? என்றும் விசாரித்து வருகிறார்கள்.  நாகர்கோவில் பிரணவ் ஜூவல்லரி யில் பணம் செலுத்தி ஏமாந்த கன்னியா குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் காவ லரிடம் புகார் கூறினார்கள். அப்போது  காவலர்கள் இது தொடர்பாக திருச்சி யில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே அங்கு சென்றுதான்  புகார் அளியுங்கள் என்று அறிவித்தனர்.