மயிலாடுதுறை, ஆக.28- மயிலாடுதுறை சில்வர் ஜுப்ளி மெட்ரிகுலேசன் தனியார் பள்ளியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மயிலாடு துறை மாவட்டக் குழு சார்பில் வாசிப்பு இயக்கம் துவக்க விழா ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் இரா.தேன்மொழி தலைமை வகித்தார். கிளை தலைவர் நா.வெற்றிவேந்தன் வரவேற்றார். சாகித்ய அகாதமி அமைப்பின் பாலபுரஸ்கர் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர், அமைப்பின் மாநில துணைத்தலை வர் கவிஞர் நந்தலாலா, மாவட்டச் செயலாளர் பாலசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் உரையாற்றினர். முகாமில் “வாசிப்பிற்கும், விவா தத்திற்கும்” என்ற தலைப்பில் எழுத் தாளர் உதயசங்கரின் பாலபுரஸ்கர் விருது பெற்ற ஆதனின் பொம்மை (சிறார் நூல்) குறித்து விவாதிக்கப் பட்டது. பின்னர் எழுத்தாளர் உதயசங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இன்றைய தலைமுறையினரிடம் வாசிப்புத் திறன் குறைந்து விட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. தமிழக அரசு மாவட்டம்தோறும் புத்தக கண்காட்சியை நடத்தி வருகிறது. இளைய தலைமுறையினரிடம் வாசிப்புத் திறனை ஏற்படுத்துவதற் காக ஆசிரியர்கள், பெற்றோர்கள், இலக்கிய அமைப்பினர் உள்ளிட்ட அனைவரும் அதற்கான பணிகளை செய்ய வேண்டும். வரலாற்றையும், அறிவியலை யும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் நாம் உள்ளோம். இடையிடையே வர லாற்றை மாற்றுவதும், திரிப்பதுமான வேலைகள் நடந்து கொண்டே இருக் கின்றன. கட்டுக் கதைகளை உண்மை என்று நம்பவைக்கும் வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. அதை நாம் பிரித்து அறிந்து கொள்ள வேண்டுமென்றால் நம்மு டைய வரலாற்றையும், வரலாற்று நூல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்; அதற்கு அறிவியல் துணை நிற்கும். அறிவியலும் வர லாறும் ஒன்றாகவே சேர்ந்து பய ணிக்கக் கூடிய நிலை உள்ளது. இந்தியாவிற்குள் முதன்முத லாக வந்தவர்கள் யார் என்ற கேள்வி எழுந்த போது, ஏராளமான கட்டுக் கதைகள் சொல்லப்பட்டாலும், அறி வியல் அந்த இடத்தில் முதன் முத லாக ஆதிஇந்தியர்களின் இந்தியா விற்கு வந்தது யார் என்று கவுனிங் ஜோசப் என்ற ஆய்வறிஞர் மூலமாக வெளிப்பட்டது. அதேபோல் சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் எங்கே சென்றார்கள்? அவர்கள் யார்? என கேள்வி எழுந்த போது, பால கிருஷ்ணன் ஐஏஎஸ் எழுதிய நூலின் மூலம் விளக்கம் வெளிப்பட்டது. அறிவியலும் வரலாறும் இணைந்து மனிதகுல நாகரீகத்தை, குறிப்பாக இந்திய நாகரிக வரலாற்றை புதிதாகச் சொல்கிற வேலை தொ டர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. இதை இளைய தலைமுறை யினரிடம் கொண்டு செல்ல வேண் டும். இளைய தலைமுறையினர் புத்த கங்களை வாசித்து புதிதாக எழுதும் திறனை வளர்த்து, சரியான வர லாற்றை புதிதாக, புனைவாக, கதை களாக எழுதுபவர்களாக மாற வேண்டும்” என்றார்.